MK Stalin Swearing Ceremony: ஆனந்த கண்ணீரில் பதவியேற்பு: நெகிழ்ந்த ஸ்டாலின்
பத்தாண்டுகளுக்கு பின்னர் திமுக ஆட்சிக் கட்டிலில் ஏறியிருப்பது திமுகவில் உள்ள அத்தனை உடன்பிறப்புகளுக்கும் கொண்டாட்டமான நிகழ்வு.
கலைஞரின் மகன் என்ற மிகப்பெரும் அடையாளம், முகவரி ஸ்டாலினுக்கு இருந்தாலும் பல இடங்களில் அது அவருக்கு சுமையாகத் தான் இருந்திருக்கிறது. ஐம்பது ஆண்டுகாலமாக கட்சிப் பணியும், மக்கள் பணியும் ஆற்றிவந்தாலும், கிடைத்த வாய்ப்புகளில் எல்லாம் தனது நிர்வாகத் திறனை நிரூபித்திருந்தாலும் வாரிசு அரசியல் மூலம் நுழைந்தவர் என ஏகத்துக்கும் விமர்சிக்கப்பட்டார் ஸ்டாலின்.
ஆனால் விமர்சனங்களுக்கு செவிகொடுக்காமல், சோர்வடையாமல் தொடர்ந்து ஓடி தனது உழைப்புக்கு தகுந்த இடத்தில் இன்று அமர்ந்துள்ளார். இதனால்தான் இன்றைய பதவியேற்பு விழாவும் அதற்கு பிந்தைய நிகழ்வுகளும் உணர்ச்சிப் பூர்வமாக இருந்தது.
ஸ்டாலினுக்கும் அவரது அண்ணன் அழகிரிக்கும் கருத்து வேறுபாடு நிலவியதாக கூறப்பட்ட நிலையில் நேற்றே அண்ணனை விழாவுக்கு அழைத்து அந்த விமர்சனத்தை ஒதுக்கி தள்ளினார். இதனால் அழகிரியின் மகன் துரை தயாநிதி விழாவில் கலந்துகொண்டார்.
பதவியேற்கும் போது ‘மு.க.ஸ்டாலின் எனும் நான்’ என கூறுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் யாரும் எதிர்பார்க்காத நிலையில் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் எனும் நான் எனக் கூறி, கலைஞரின் பெயரை அரங்கில் உச்சரித்ததும் அவருக்குள் இருந்த உணர்ச்சிப் பெருக்கு கூடியிருந்தவர்களுக்கும் தொற்றியது. அந்த நொடி துர்கா ஸ்டாலின் கண்கள் ஆனந்த கண்ணீரால் குளமாகியது.
No comments:
Post a Comment