ஆம்புலன்ஸாக மாறிய ஆட்டோக்கள்.. அதுவும் எல்லாருக்கும் இலவசம்!
டெல்லியில் கொரோனா இரண்டாம் அலை கோர தாண்டவம் ஆடி வருகிறது. மருத்துவமனைகள் நிரம்பி வழிவதோடு ஆக்சிஜன் தட்டுப்பாடும் கடுமையாக உள்ளது. இதுபோக, ஆக்சிஜன்களும் முழு நேரம் பரபரப்பாக செயல்பட்டு வருகின்றன.
ஆம்புலன்ஸ்களுக்கு தேவையும், சுமையும் அதிகரித்துள்ள நிலையில் ஆட்டோ ஆம்புலன்ஸ்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதில் ஆட்டோக்கள் ஆம்புலன்ஸாக மாற்றப்பட்டுள்ளன. ஆக்சிஜன் உதவி தேவைப்படும் கொரோனா நோயாளிகளுக்காக ஆட்டோ ஆம்புலன்ஸ்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
இந்த ஆட்டோக்களில் கொரோனா நோயாளிகள் மருத்துவமனைகளுக்கு இலவசமாக பயணிக்கலாம். ஒவ்வொரு ஆட்டோவிலும் ஒரு ஆக்சிஜன் சிலிண்டரும், சானடைசரும் வைக்கப்பட்டுள்ளன.
No comments:
Post a Comment