கன்னியாகுமரி இடைத்தேர்தல்: விஜய் வசந்த் வெற்றி முகம்!
கொரோனா தொற்றுக்கு ஆளாகியிருந்த கன்னியாகுமரி மக்களவை தொகுதி உறுப்பினர் வசந்தகுமார், சிகிச்சை பலனின்றி காலமானார். இதனால், காலியான அவரது கன்னியாகுமரி தொகுதிக்கு கடந்த 6ஆம் தேதி நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலுடன் சேர்த்து இடைத்தேர்தல் நடைபெற்றது.
கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதி இடைத்தேர்தலில், தமிழக காங்கிரஸ் கட்சி சார்பில் வசந்தகுமாரின் மகன் விஜய் வசந்த் போட்டியிட்டார். பாஜக சார்பில் பொன்.ராதாகிருஷ்ணன் போட்டியிட்டார்.
இந்த நிலையில் இன்று எண்ணப்பட்ட வாக்கு எண்ணிக்கையில், ஜய் வசந்த் 5,67,280 வாக்குகளையும், அவரை எதிர்த்து பாஜக சாபாக போட்டியிட்ட பொன் ராதாகிருஷ்ணன் 4,32,906 வாக்குகளையும் பெற்றுள்ளார். இதனால், விஜய் வசந்த் 1,34,374 வாக்குகள் முன்னிலை பெற்றுள்ளார்.
கடந்த 2019ஆம் ஆண்டு மக்களவை தேர்தலில் பாஜக வேட்பாளாராக இருந்த பொன்.ராதாகிருஷ்ணன் வசந்தகுமாரிடம் தோல்வியுற்றார். இப்போது அவரது மகனான விஜய் வசந்த்திடமும் பொன். ராதாகிருஷ்ணன் தோல்வி அடையும் வகையில் கள நிலவரங்கள் உள்ளன.
No comments:
Post a Comment