சிவகார்த்திகேயனை பார்த்து விஜய் ஆண்டனிக்கு வந்த ஆசை - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Friday, May 7, 2021

சிவகார்த்திகேயனை பார்த்து விஜய் ஆண்டனிக்கு வந்த ஆசை

சிவகார்த்திகேயனை பார்த்து விஜய் ஆண்டனிக்கு வந்த ஆசை


இசையமைப்பாளராக தன் கெரியரை துவங்கிய விஜய் ஆண்டனி கடந்த 2012ம் ஆண்டு வெளியான நான் படம் மூலம் நடிகரானார். அதை தொடர்ந்து அவர் வித்தியாசமான கதை கொண்ட படங்களாக தேர்வு செய்து நடித்து வருகிறார். அவர் படங்களின் கதைகள் மட்டும் அல்ல, டைட்டிலும் கூட வித்தியாசமாகத் தான் இருக்கும்.
எந்த நடிகரின் வழியையும் பின்பற்றாமல் என் வழி தனி வழி என்று சென்று கொண்டிருக்கிறார் விஜய் ஆண்டனி. அவர் ஆனந்த் கிருஷ்ணன் இயக்கத்தில் நடித்திருக்கும் கோடியில் ஒருவன் படம் ரிலீஸுக்கு தயாராக இருக்கிறது. அந்த படத்தில் நடித்ததுடன் எடிட்டிங் வேலையையும் செய்கிறார் விஜய் ஆண்டனி.

கோடியில் ஒருவனை அடுத்து பிச்சைக்காரன் 2 படத்திலும் ஆனந்த் கிருஷ்ணனும், விஜய் ஆண்டனியும் சேர்ந்து பணியாற்றவிருக்கிறார்கள். பிச்சைக்காரன் படத்தை இயக்கிய ப்ரியா கந்தசாமி அதன் இரண்டாம் பாகத்தை இயக்கவில்லை.

மேலும் சி.எஸ். அமுதன் இயக்கத்தில் கிரைம் த்ரில்லர் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறார் விஜய் ஆண்டனி. இது தவிர பாலாஜி குமார் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கவிருக்கிறார். அந்த படத்தில் அவர் சால்ட் அன்ட் பெப்பர் லுக்கில் வரப் போகிறார். பாலாஜி குமார் படத்தில் விஜய் ஆண்டனிக்கு ஜோடியாக ரித்திகா சிங் நடிக்கிறார்.



இந்த விஜய் ஆண்டனிக்கு மட்டும் எங்கிருந்து தான் வித்தியாசமான கதை கிடைக்கிறதோ என்று பிற நடிகர்களும், ரசிகர்களும் வியக்க அவருக்கோ சிவகார்த்திகேயன் போன்று நடிக்க ஆசை ஏற்பட்டிருக்கிறது.

இது குறித்து அவர் பேட்டி ஒன்றில் கூறியதாவது,

சிவகார்த்திகேயன் போன்று ஜாலியான படங்களில் நடிக்க ஆசையாக இருக்கிறது. மேலும் காதல் படங்களில் நடிக்க விரும்புகிறேன். அதனால் காதல் கதை வைத்திருக்கும் இயக்குநர்கள் என்னை தாராளமாக அணுகலாம் என்று தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

Post Top Ad