எந்த ஊருக்கெல்லாம் மழைக்கு வாய்ப்பு? வானிலை ஆய்வு மையம் தகவல்!
வெப்பச்சலனம் காரணமாக மே 6ஆம் தேதி மேற்கு தொடர்ச்சி மலை ஒட்டிய மாவட்டங்கள், தென் தமிழக மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள், ஈரோடு, சேலம், தர்மபுரி மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய இலேசானது முதல் மிதமான மழையும், ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவை பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும் என
சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
உள் கர்நாடகா மற்றும் அதனை ஒட்டிய உள் தமிழகம் வரை 1 கிலோமீட்டர் உயரத்தில் உருவாகவுள்ள வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, நாளை (மே 7) மேற்கு தொடர்ச்சி மலை ஒட்டிய மாவட்டங்கள், தென் தமிழக மாவட்டங்கள், உள் மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள், கடலூர், திருச்சிராப்பள்ளி, கரூர், சேலம், நாமக்கல், கிருஷ்ணகிரி, தர்மபுரி மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய இலேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவை பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும்.
No comments:
Post a Comment