கடுமையான ஊரடங்கு வேணும்.. எய்ம்ஸ் இயக்குநர் அட்வைஸ்!
கொரோனா இரண்டாம் அலையுடன் இந்தியா போராடி வருகிறது. மாநில அளவில் கொரோனா கட்டுப்பாடுகள் அமலில் இருந்தாலும் நாடு தழுவியஊரடங்கு அமல்படுத்தப்படவில்லை.
இந்நிலையில், கொரோனா தொற்று விகிதம் அதிகமாக இருக்கும் பகுதிகளில் மட்டும் கடும் ஊரடங்கு அமல்படுத்தும்படி எய்ம்ஸ் மருத்துவமனை இயக்குநர் ரந்தீப் குலேரியா அறிவுறுத்தியுள்ளார்.
இதன்படி, கொரோனா தொற்று விகிதம் 10 விழுக்காட்டுக்கு மேல் இருக்கும் பகுதிகள் அல்லது மருத்துவமனைகளில் படுக்கைகள் நிரம்பிய விகிதம் 60 விழுக்காட்டுக்கு மேல் இருக்கும் பகுதிகளில் கடும் ஊரடங்கு கட்டுப்பாடுகளை விதிக்கும்படி ரந்தீப் குலேரியா அறிவுறுத்தியுள்ளார்.
No comments:
Post a Comment