இந்தியாவில் கொரோனா 3ஆவது அலை: இந்த ஊரடங்கு போதாது!
இந்தியாவில் கொரோனா வைரஸ் 2ஆவது அலையின் தாக்கம் கோரதாண்டவம் ஆடி வருகிறது. நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை புதிய உச்சம் தொட்டு மக்களை அச்சம் கொள்ளச் செய்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 3 லட்சத்து 57 ஆயிரத்து 229- பேருக்கு புதிதாக தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனாவால் ஒரே நாளில் 3,449 பேர் உயிரிழந்துள்ளனர்.
நாடு முழுவதும் இதுவரை 15 கோடியே 89 லட்சத்து 32 ஆயிரத்து 921 டோஸ்கள் தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இருப்பினும், கொரோனாவின் வீரியம் குறைந்தபாடில்லை. இந்தியாவில் தற்போது மூன்று வகையான உருமாறிய கொரோனா வைரஸ்கள் மிகத் தீவிரமாக பரவி வருவதே இத்தகைய தாக்கத்துக்கு காரணம் என்று கூறப்படுகிறது.
கொரோனாவை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் எடுத்து வருகின்றன. இரவு நேர ஊரடங்கு பகுதி நேர ஊரடங்கு உள்ளிட்டவை மாநில அரசுகளால் அமல்படுத்தப்பட்டுள்ளன. ஆனாலும், முழு ஊரடங்கை அமல்படுத்த வேண்டும் என்று காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி தொடங்கி மருத்துவர்கள் பலரும் எச்சரிக்கை விடுத்து வருகின்றனர். உச்ச நீதிமன்றமும் கூட பொது முடக்கம் அமல்படுத்துவதை மத்திய, மாநில அரசுகள் பரிசீலிக்க வேண்டும் என்று பரிந்துரைத்துள்ளது.
No comments:
Post a Comment