சேலம்-சென்னை சாலையில் 6 மாதமாக பள்ளம்: அதிகாரிகள் கண்ணில் பட்டதே இல்லையா? - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Tuesday, May 4, 2021

சேலம்-சென்னை சாலையில் 6 மாதமாக பள்ளம்: அதிகாரிகள் கண்ணில் பட்டதே இல்லையா?

சேலம்-சென்னை சாலையில் 6 மாதமாக பள்ளம்: அதிகாரிகள் கண்ணில் பட்டதே இல்லையா?


சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே நரசிங்கபுரம் நகராட்சிக்கு எதிரே உள்ள சேலம்-சென்னை செல்லும் நெடுஞ்சாலையில் கடந்த 6 மாதத்திற்கு முன்பு டெலிபோன் கேபிள் அமைப்பதற்காகக் குழி தோண்டப்பட்டது.

டெலிபோன் கேபிள் அமைக்கும் பணிகள் முடிவடைந்தது. ஆனால் அந்தச் சாலை சீரமைக்கப்படவில்லை. முறையாகக்கூடச் சீற் செய்யவில்லை.

இந்த சூழலில் கடந்த 15 நாட்களுக்கு முன்பு அதே இடத்தில் மீண்டும் பள்ளம் ஏற்பட்டது. இதனால் அவ்வழியாகச் செல்லும் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர்.

சேதமடைந்த சாலையைச் சீரமைத்துத் தரக்கோரி நரசிங்கபுரம் நகராட்சி நிர்வாகத்திடம் பகுதி மக்கள் பலமுறை புகார் தெரிவித்துள்ளனர். எனினும் சாலை சீரமைக்கப்படவில்லை.

No comments:

Post a Comment

Post Top Ad