இன்னும் 4 நாள்தான்.. உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத்துக்கு கொலை மிரட்டல்! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Tuesday, May 4, 2021

இன்னும் 4 நாள்தான்.. உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத்துக்கு கொலை மிரட்டல்!

இன்னும் 4 நாள்தான்.. உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத்துக்கு கொலை மிரட்டல்!


உத்தரப் பிரதேச முதல்வர் இன்னும் நான்கு நாட்களுக்கு மட்டுமே உயிரோடு இருப்பார் என மர்ம நபர்கள்கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். அடையாளம் தெரியாத எண்ணில் இருந்து உத்தரப் பிரதேச காவல் துறை கட்டுப்பாட்டு அறையின் வாட்சப் குழுவுக்கு வந்த மெசேஜில் இந்த மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.

இந்த மிரட்டல் மெசேஜ் வந்த 20 நிமிடங்களில் சுஷாந்த் கோல்ஃப் சிட்டி காவல்நிலையத்தில் எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்டது. கொலை மிரட்டல் மெசேஜ் வந்ததாக உத்தரப் பிரதேச காவல்துறை சீனியர் அதிகாரிகளும் உறுதிப்படுத்தியுள்ளனர்.

எஃப்ஐஆர் ரிப்போர்ட்டில், “உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் இன்னும் நான்கு நாட்களுக்கு மட்டுமே உயிரோடு இருப்பார் என மிரட்டல் வந்துள்ளது” என்று பதிவு செய்யப்பட்டுள்ளது.

இவ்விவகாரம் குறித்து காவல் நிலையங்களுக்கு தகவல் அனுப்பப்பட்டு விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. மிரட்டல் விடுத்தவரின் இடம் தேடப்பட்டு வருவதாக லக்னோ போலீஸ் இணை கமிஷனர் நிலப்ஜா சவுதரி தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

Post Top Ad