கொரோனா இரண்டாம் அலைக்கு இதுதான் காரணம்.. ஆர்.எஸ்.எஸ். தலைவர் அட்வைஸ்! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Saturday, May 15, 2021

கொரோனா இரண்டாம் அலைக்கு இதுதான் காரணம்.. ஆர்.எஸ்.எஸ். தலைவர் அட்வைஸ்!

கொரோனா இரண்டாம் அலைக்கு இதுதான் காரணம்.. ஆர்.எஸ்.எஸ். தலைவர் அட்வைஸ்!

கொரோனா இரண்டாம் அலை நெருக்கடியை இந்தியா எதிர்கொண்டு வருகிறது. நோயாளிகள் எண்ணிக்கை நாளுக்கு நாள் உயர்வு, ஆக்சிஜன் தட்டுப்பாடு, மருத்துவ உபகரணங்கள் தட்டுப்பாடு என பல பிரச்சினைகள் நீடிக்கின்றன.

இந்நிலையில், இந்தியாவில் கொரோனா பரவல் அதிகரித்ததற்கு அரசு, நிர்வாகம், பொதுமக்கள் என அனைத்து தரப்பினரிடையே உருவான அலட்சியமும், கவனக்குறைவும்தான் காரணம் என ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் தலைவர் மோகன் பகவத் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து பேசிய மோகன் பகவத், “கொரோனா இரண்டாம் அலைக்கு பின் அரசு, நிர்வாகம், பொதுமக்கள் மத்தியில் உருவான அலட்சியத்தால் தற்போது நிலவும் சூழலை நாம் சந்தித்து வருகிறோம். முதல் அலை கட்டுக்குள் வந்தபின் மருத்துவர்கள், வல்லுநர்களின் கருத்துகள் புறக்கணிக்கப்பட்டன.

மூன்றாம் அலை உருவாகலாம் என்று கூறப்படுகிறது. இந்த சோதனைக் காலத்தில் அனைவரும் ஒற்றுமையாக இருந்து குழுவாக பணிபுரிய வேண்டும். அனைவரும் தயார்நிலையில் இருக்க வேண்டும்.

கொரோனா வைரஸ் மனித இனத்துக்கே சவாலாக வந்துள்ளது. இதை எதிர்கொள்வதில் மற்ற நாடுகளுக்கு இந்தியா ஒரு உதாரணமாக இருக்க வேண்டும். பகுத்தறிவற்ற கருத்துகளை தவிர்த்துவிட்டு எல்லோரும் இணைந்து பணிபுரிய வேண்டும்” என்று கேட்டுக்கொண்டுள்ளார்.

No comments:

Post a Comment

Post Top Ad