தரமற்ற ஈபி போஸ்ட், சிமெண்டை காணோம் தலையில் விழும் ஆபத்து விருதுநகரில்!
விருதுநகர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட செங்கோட்டை ஊராட்சியில் சமத்துவபுரம் கடந்த 2000ஆம் ஆண்டு சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இந்த குடியிருப்புகளுக்கு மின் இணைப்புக்காக 20 ஆண்டுகளுக்கு முன்பு மின்கம்பங்கள் அமைக்கப்பட்டன.
20 ஆண்டுகள் ஆன நிலையில் சுமார் 10க்கும் மேற்பட்ட மின்கம்பங்கள் தற்பொழுது பலத்த சேதமடைந்து சிமிண்ட் கலவைகள் உதிர்ந்து கம்பிகளாக காட்சி அளிக்கும் அவல நிலையில் உள்ளது. எந்த நேரத்திலும் இவை சாய்ந்து விழும் நிலையும் உள்ளது.
இந்த மின்கம்பங்கள் பெரும்பாலும் வீட்டு வாசலில் குழந்தைகள் விளையாடும் மைதானம், நியாவிலை கடை எனப் பொதுமக்கள் அதிகம் பயன்படுத்தும் இடத்தில் உள்ளது. சேதமடைந்த மின்கம்பங்கள் எந்த நேரத்திலும் விழும் நிலை இருப்பதால் பொதுமக்கள் மற்றும் குழந்தைகள் அச்சத்துடன் இருப்பதாகவும் குழந்தைகளின் உயிர்கள் கேள்விக்குறியாகவே உள்ளது என்றும் மக்கள் வருத்தம் தெரிவிக்கின்றனர்.
இதுகுறித்து பஞ்சாயத்து நிர்வாகம் மாவட்ட நிர்வாகத்திடமும் பலமுறை புகார் அளித்துள்ளது. அதேபோல் யூனியன் அலுவலகத்திலும் மனுக்கள் பல கொடுத்துள்ளது. எந்த பலனுமில்லை. எனவும் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கூறி அப்பகுதி மக்கள் நீண்ட நாளாகக் கோரிக்கை முன் வைத்துள்ளனர்.
No comments:
Post a Comment