ஆணி பட்டம் சீச்ன் தொடங்கியச்சு: இனி கோவை லெவலே வேறதான்!
தமிழ்நாட்டில் கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர் பகுதியில் மேற்கொள்ளப்படும் சின்ன வெங்காயம் சாகுபடி முக்கிய பங்கு வகிக்கிறது.
நடப்பாண்டு, ஆணி பட்டத்தை எதிர்நோக்கி, விவசாயிகள் காத்திருந்தனர். இந்தச் சூழலில், கடந்த வாரம் முதல் வெப்ப சலனத்தால் மழை பெய்தது.
ஈரப்பதம் கண்ட நிலம், உழுது தயார்ப்படுத்தப்பட்டது. வெளி மாவட்டங்களிலிருந்து, விதை வெங்காயம் கொள்முதல் செய்யப்பட்டன. இதனைத் தொடர்ந்து மாதம்பட்டி, குப்பனூர், கரடிமடை உள்ளிட்ட கிராமங்களில், நடவு பணியில் விவசாயிகள் தீவிரம் காட்டுகின்றனர்.
கோவை வேளாண் பல்கலைக்கழகத்தில் காவி திருவள்ளுவர்: பாஜக பின்னணி?
அவ்வப்போது மழை பெய்வதால், குளிர்ந்த காற்று வீசுகிறது. இந்த சீதோஷ்ணம், சின்ன வெங்காயம் பயிர் வளர்வதற்கு ஏற்றது. இதனால், ஒரே சமயத்தில் பரவலாக நடவு துவங்கப்பட்டுள்ளது.
அதே சமயம், விதை வெங்காயத்தின் தேவை அதிகரித்துள்ளதால், விலையும் ஏற்றம் கண்டு வருவதாக அப்பகுதி விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.
No comments:
Post a Comment