ஸ்டாலின் அறிவிப்பு: இனிப்புகள் வழங்கி கொண்டாடிய சேலம் மக்கள்! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Thursday, June 24, 2021

ஸ்டாலின் அறிவிப்பு: இனிப்புகள் வழங்கி கொண்டாடிய சேலம் மக்கள்!

ஸ்டாலின் அறிவிப்பு: இனிப்புகள் வழங்கி கொண்டாடிய சேலம் மக்கள்!


சென்னை எட்டு வழி சாலை திட்டத்தை கண்டித்து சேலம், தர்மபுரி, திருவண்ணாமலை உள்ளிட்ட 5 மாவட்டத்தைச் சேர்ந்த இத்திட்டத்தால் பாதிக்கப்படும் விவசாயிகள் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வந்தனர். இதனால் ஐந்து மாவட்டங்களிலும் 300க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. சேலம் மாவட்டத்தில் மட்டும் 50க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

இந்த நிலையில் தேர்தல் பிரச்சாரத்தின் போது திமுக ஆட்சிக்கு வந்தால் எட்டு வழி சாலை திட்டம் ரத்து செய்யப்படும் என அக்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார். இந்த நிலையில் இன்று நடைபெற்ற சட்டப்பேரவை கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எட்டு வழி சாலை திட்டத்தை எதிர்த்து போராடிய நபர்கள் மீது போடப்பட்ட வழக்குகள் ரத்து செய்யப்படும் என அறிவித்துள்ளார்.

முதலமைச்சரின் இந்த அறிவிப்பை வரவேற்று சேலம் அருகே குப்பனூர் பகுதியில் விவசாயிகள் பட்டாசு வெடித்து, இனிப்புகள் வழங்கி கொண்டாடினர். விரைவில் முதலமைச்சர் இத்திட்டத்தை முழுமையாக ரத்து செய்வார் என எதிர்பார்ப்பதாகவும் விவசாயிகள் அப்போது தெரிவித்தனர்.



No comments:

Post a Comment

Post Top Ad