திருப்பதி ஏழுமலையானுக்கே இப்படி ஒரு சிக்கல்: கையை விரித்த ஒன்றிய அரசு
இந்தியாவில் வேறெந்த கோயிலைவிடவும் திருப்பதி ஏழுமலையானுக்கு பக்தர்கள் காணிக்கைகளை வாரி வழங்குவர். இதனாலே ஏழுமலையானை பணக்கார கடவுள் என்றும் பக்தர்கள் அழைக்கிறார்கள். தங்கமாகவும், பணமாகவும் தினம் தினம் பக்தர்கள் கொட்டி தீர்க்கின்றனர்.
ஒன்றிய அரசு பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகளை 2016ஆம் ஆண்டு நவம்பர் 8ஆம் தேதி திடீரென ரத்து செய்வதாக அறிவித்தது. இந்த சூழலில் பக்தர்கள் தொடர்ந்து தங்கள் பழைய ரூபாய் நோட்டுகளை காணிக்கையாக செலுத்தினர். இதுவரை பணமதிப்பழிப்பு செய்யப்பட்ட பழைய நோட்டுகளில் 49.70 கோடி ரூபாய் தேவஸ்தானத்திடம் உள்ளது. இதில், 1.8 லட்சம் பழைய 1,000 ரூபாய் நோட்டுகளும், 6.34 லட்சம் 500 ரூபாய் நோட்டுகளும் உள்ளன.
No comments:
Post a Comment