பிரசாந்த் கிஷோரை வளைத்த காங்கிரஸ்? டெல்லியில் ஒப்பந்தம் கையெழுத்தா?
2013ஆம் ஆண்டு மோடி பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு பிரச்சாரப் பணிகள் தொடங்கியபோதே பிரசாந்த் கிஷோர் என்ற பெயரும் நாடு முழுவதும் பிரபலமானது. மோடி என்ற பிம்பத்தை மக்கள் மத்தியில் கொண்டு சென்றதில் பிரசாந்த் கிஷோருக்கு முக்கிய பங்கு இருக்கிறது.
தேர்தல் வியூகம் வகுக்கும் ஐபேக் நிறுவனம் அதன்பின்னர் மோடிக்கு எதிராக அரசியல் செய்யும் பல கட்சிகளுக்காகவும் பணியாற்றியது. அதில் வெற்றியும் பெற்றுவருகிறது. அரவிந்த் கெஜ்ரிவால், நிதிஷ்குமார், அமரீந்தர் சிங், ஜெகன்மோகன் ரெட்டி, மம்தா பானர்ஜி, மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட பல முதலமைச்சர்களுக்காக பணியாற்றியுள்ளார் பிரசாந்த் கிஷோர்.
மோடியை ஆட்சிக்கு கொண்டு வந்த பிரசாந்த் கிஷோர் தற்போது இரண்டாவது முறையாக ஆட்சியிலிருக்கும் மோடியை அரியணையிலிருந்து இறக்கும் வேலையை பார்க்கத் தொடங்கியுள்ளார் என பேசப்பட்டது. அதன் தொடர்ச்சியாக அவர் சரத் பவாரை சில முறை சந்தித்து நீண்டநேரம் விவாதித்தார். அதன்பின் சரத்பவார் காங்கிரஸ் அல்லாத எதிர்கட்சிகளுடன் ஆலோசனைக் கூட்டம் நடத்தினார்.
No comments:
Post a Comment