ஹஜ் பயணம்.. ஓகே சொன்ன சவுதி அரேபியா.. கட்டுப்பாடுகள் இவைதான்!
கொரோனா நெருக்கடிக்கு மத்தியில் ஹஜ் பயணத்துக்கு அனுமதி அளிப்பது குறித்து சவுதி அரேபியா அரசு ஆலோசித்து வந்தது. இந்நிலையில், இந்த ஆண்டு ஹஜ் பயணத்துக்கு தடுப்பூசி போட்டுக்கொண்ட 60,000 யாத்ரீகர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என சவுதி அரேபியா அரசு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து ஜஹ் அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “இந்த ஆண்டு ஹஜ் பயணம் சவுதி குடிமக்கள் மற்றும் சவுதி அரேபியாவில் வசிப்பவர்களுக்கு அனுமதிக்கப்படும். மொத்தம் 60,000 பேர் மட்டுமே யாத்திரை செல்ல அனுமதிக்கப்படும்” என்று தெரிவித்துள்ளது.
ஜூலை மாத இறுதியில் ஹஜ் பயணம் தொடங்கவுள்ளது. கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள், 65 வயதுக்கு கீழானவர்கள், தீவிர நோய்களால் பாதிக்கப்படாதவர்கள் மட்டுமே ஹஜ் பயணம் மேற்கொள்ள அனுமதிக்கப்படும் என சவுதி அரேபிய அரசு தெரிவித்துள்ளது.
கடந்த ஆண்டும் இதேபோல கட்டுப்பாடுகளுடன் ஹஜ் யாத்திரை நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது. கடந்த ஆண்டு ஹஜ் பயணத்தில் 10,000 பேர் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர். கடைசியாக 2019ஆம் ஆண்டு ஹஜ் யாத்திரையில் 25 லட்சம் பேர் பங்கேற்றது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment