‘காச எடுங்க மக்கா’: எஸ்கேப்பான எம்.எல்.ஏ.வை பூட்டி வைத்த கிராம மக்கள்! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Sunday, June 6, 2021

‘காச எடுங்க மக்கா’: எஸ்கேப்பான எம்.எல்.ஏ.வை பூட்டி வைத்த கிராம மக்கள்!

‘காச எடுங்க மக்கா’: எஸ்கேப்பான எம்.எல்.ஏ.வை பூட்டி வைத்த கிராம மக்கள்!



தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணி வெற்றி பெற்று ஸ்டாலின் முதல்வராக பொறுப்பேற்றுள்ளார். கூட்டணிக் கட்சியான காங்கிரஸ் 25 தொகுதிகள், கன்னியாகுமரி மக்களவை தொகுதிக்கான இடைத்தேர்தலில் போட்டியிட்டது. நீண்ட இழுபறிகளுக்கு பின்னரே காங்கிரஸ் கட்சிக்கு இந்த தொகுதிகளை திமுக தலைமை ஒதுக்கியது. எப்படியும் அதிக இடங்களில் வெற்றி பெற்று கட்சியின் மானத்தை காபாற்றி விட வேண்டும் என்ற எண்ணத்தில் காங்கிரஸ் கட்சியும் தீவிரமாக களப்பணியாற்றியது. அதன்படி, 18 இடங்கள், கன்னியாகுமரி இடைத்தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றுள்ளது.

குமரி மாவட்டம் மார்த்தாண்டம் அருகே உள்ள காப்புக்காடு பகுதியைச் சேர்ந்தவர் ரூபி மனோகரன், சென்னையில் கட்டுமானத் தொழில் செய்துவரும் கோடீஸ்வரரான ரூபி மனோகரன் இந்த முறை நாங்குநேரி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார். இவர் தேர்தல் பிரசாரத்தின் போது ஓட்டு ஒன்றுக்கு தலா ரூ.500 கொடுப்பதாக சொல்லி, அதற்கான டோக்கனையும் விநியோகித்ததாக கூறப்படுகிறது.


ஆனால், தேர்தலில் வெற்றி பெற்று எம்.எல்.ஏ.வாகி விட்டதும் பொதுமக்களுக்கு அளித்த வாக்குறுதியின்படி பணத்தை ரூபி மனோகரன் விநியோகிக்கவில்லை என்று குற்றம் சாட்டுகிறார்கள் அந்த தொகுதிவாசிகள். இந்த நிலையில், தனது தொகுதிகுட்பட்ட கிராமம் ஒன்றுக்கு கொரோனா தடுப்பூசி முகாமை துவக்கி வைக்க ரூபி மனோகரன் சென்றுள்ளார்.

இதனையறிந்த அக்கிராம வாசிகள் எம்.எல்.ஏ.வை முற்றுகையிட்டு, அவரை முகாமுக்குள் பூட்டி வைத்துள்ளனர். டோக்கனை காட்டி ‘காசு தறேன்னு சொல்லிட்டு இப்படி செஞ்சா எப்படி; காச குடுத்துட்டு போங்க மக்கா’ என்று உரிமையோடு அக்கிராமமக்கள் கேட்டதாக தெரிகிறது. இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, நடைபெற்ற பேச்சுவார்த்தைக்கு பின்னர், தன்னை முற்றுகையிட்டவர்களுக்கு தலா ரூ.200 கொடுத்து விட்டு அங்கிருந்து எம்.எல்.ஏ. ரூபி மனோகரன் விடுதலையாகியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

முன்னதாக, மறைந்த எம்.பி.வசந்தகுமார் கன்னியாகுமரி எம்.பி.யாக தேர்வானதும் நடைபெற்ற நாங்குநேரி இடைத்தேர்தலின் போது அங்கு போட்டியிட ரூபி மனோகரனுக்கே காங்கிரஸ் மேலிடம் சீட்டு வழங்கியது. அந்த தேர்தலில் அவர் தோல்வியடைந்தார். ஆனாலும் அந்த சமயத்தில், கட்சி நிதி தர வேண்டாம்; செலவை நானே பார்த்துக் கொள்கிறேன் என்று சோனியாவையே ரூபி மனோகரன் வியக்க வைத்தார் என்று செய்திகள் வெளியாகின என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Post Top Ad