100 நாள் வேலைவாய்ப்புத் திட்டத்தின் ஊதியம் உயர்வு! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Sunday, July 11, 2021

100 நாள் வேலைவாய்ப்புத் திட்டத்தின் ஊதியம் உயர்வு!

100 நாள் வேலைவாய்ப்புத் திட்டத்தின் ஊதியம் உயர்வு!


மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டம் மத்திய அரசால் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின் கீழ் ஏரிகள், ஆறுகள், வாய்க்கால்களை தூர் வாருதல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதன் மூலம் குறைந்த பட்ச வேலைவாய்ப்பு உறுதி செய்யப்படுகிறது.

இதில் இணையும் பணியாளா்களின் எண்ணிக்கை அடிப்படையில் அந்தத் திட்டத்தின் கீழ் பணிகள் வழங்கப்பட்டு அதற்கான ஊதியம் அவர்களது வங்கி கணக்கில் வரவு வைக்கப்படுகிறது. இந்த திட்டத்தில் வேலை செய்பவர்களுக்கு நாள் ஒன்றுக்கு ரூ.200 வரை ஒவ்வொரு மாநிலங்களுக்கு ஏற்ப வழங்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தில் பணியாற்றும் பணியாளர்களுக்கான ஊதியத்தை உயர்த்தி ஒடிசா மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. பொது மக்களுக்கு உதவும் வகையில் ரூ.1,690 கோடி நிதி ஊக்குவிப்பு திட்டத்தை கடந்த மாதம் ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் அறிவித்தார்.

அதன் தொடர்ச்சியாக, தற்போது, தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தில் கடந்த 3 மாதங்களாகப் பணியாற்றிய 32 லட்சம் பேருக்கு ஒரு நாள் ஊதியத்தை ரூ.207இலிருந்து ரூ.50 உயர்த்தப்பட்டு ரூ.257ஆக வழங்கப்படுவதாக அவர் அறிவித்துள்ளார். இதற்காக உடனடியாக ரூ.532 கோடி ஒதுக்கியும் அவர் அறிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Post Top Ad