ரூ.10 லட்சம் நிதி: எப்படி விண்ணப்பிப்பது? - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Friday, July 23, 2021

ரூ.10 லட்சம் நிதி: எப்படி விண்ணப்பிப்பது?

ரூ.10 லட்சம் நிதி: எப்படி விண்ணப்பிப்பது?


StartupTN என அடையாளப்படுத்தப்பட்டுள்ள தமிழ்நாடு ஸ்டார்ட்அப் மற்றும் புத்தாக்க இயக்கம் என்ற அமைப்பு, தமிழ்நாடு அரசின் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறையின்கீழ், மார்ச் மாதம் 2021ஆம் ஆண்டு இந்திய நிறுவனச் சட்டம் பிரிவு 8-ன் கீழ் பதிவு செய்யப்பட்ட ஒன்றாகும். மாநிலத்தில் தொடங்கப்பட உள்ள ஸ்டார்ட்அப் நிறுவனங்களுக்கு இந்த அமைப்பு தனது திட்டங்கள் மூலம் உதவிகள் வழங்குவதையே ஒற்றை நோக்காகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு ஸ்டார்ட்அப் மற்றும் புத்தாக்கக் கொள்கையில் திட்டமிடப்பட்டுள்ள திட்டங்களில் ஒன்று தொழிலின் ஆரம்பக் கட்ட தொடக்க நிலைக்குத் தேவையான ஆரம்பக் கட்ட ஆதார நிதி (Seed Grant) உதவி அளிப்பது ஆகும். தமிழ்நாடு ஸ்டார்ட்அப் தனது டான்சீட் (TANSEED) முதல் பதிப்பை ஜனவரி, பிப்ரவரி 2021 மாதங்களில், (தமிழ்நாடு ஸ்டார்ட்அப் ஆரம்பக் கட்ட ஆதார நிதி (Seed Grant))யைப் பெரும் சவால் போட்டி மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட நம்பிக்கைக்குரிய பத்து ஸ்டார்ட்அப் நிறுவனங்களுக்குத் தலா ரூ.10 லட்சம் வீதம் ஆரம்பக் கட்ட ஆதார நிதி (Seed Grant) அளித்து ஆதரவளித்தது.



இந்த நிலையில், StartupTN 2021 ஜூலை முதல் செப்டம்பர் மாதங்களில் இரண்டாவது டான்சீட் (TANSEED) பதிப்பினை இருபது ஸ்டார்ட்அப் நிறுவனங்களுக்குத் தலா ரூ. 10 இலட்சம் வரை ஆதரவளிக்கத் தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.
இதற்கான விண்ணப்பங்கள் 2021 ஜூலை 23 முதல் www.startuptn.in இணையதளம் மூலமாக வரவேற்கப்படுகின்றன. விண்ணப்பிக்க கடைசி நாள்: 20.08.2021 ஆகும். Startup India மற்றும் StartupTN தமிழ்நாடு ஆகியவற்றில் பதிவு செய்யப்பட்ட ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் இதற்கு விண்ணப்பிக்க தகுதி உடையனவாகும்.


தமிழ்நாட்டில் பதிவு செய்யப்பட்ட அனைத்து ஸ்டார்ட்அப் நிறுவனங்களுக்கும், தமிழ்நாட்டில் பதிவு செய்ய விரும்புவோருக்கும் திறந்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. ஏதேனும் சந்தேகங்கள் இருப்பின், support@startuptn.in - க்கு மின்னஞ்சல் அனுப்பலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது

No comments:

Post a Comment

Post Top Ad