மத்திய அமைச்சர்களிலேயே எல்.முருகன் மீது அதிக குற்ற வழக்குகள்! சொத்து மதிப்பு ரூ.2.67 கோடி!
பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட்டுள்ள நிலையில், புதிதாக பதவி ஏற்றுள்ள மற்றும் அனைத்து அமைச்சர்களின் சொத்து விவரங்கள், குற்ற வழக்குகள் பின்னணி குறித்த தகவல்கள் வெளியாகி உள்ளன.
நரேந்திர மோடி நாட்டின் பிரதமராக தொடர்ந்து இரண்டாவது முறையாக கடந்த 2019ம் ஆண்டு பதவி ஏற்றார். அப்போது அவருடன் பதவி ஏற்ற மத்திய அமைச்சரவை, கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு, அண்மையில் விரிவாக்கம் செய்யப்பட்டது.
மூத்த மத்திய அமைச்சர்கள் ஹர்ஷ் வர்தன், ரமேஷ் பொக்ரியால், ரவிசங்கர் பிரசாத் உள்ளிட்டோர் தங்களது பதவியை ராஜினாமா செய்தனர். புதிய மத்திய அமைச்சர்களாக தமிழக பா.ஜ.க.,வைச் சேர்ந்த எல். முருகன் உட்பட 43 பேர் பதவி ஏற்றனர். இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடி அமைச்சரவையில் அங்கம் வகித்து வரும் மத்திய அமைச்சர்களின் சொத்து விவரங்கள், குற்ற வழக்குகள் பின்னணி, கல்வித் தகுதி உள்ளிட்ட விவரங்கள் வெளியாகி உள்ளன.அதன்படி, மொத்தமுள்ள 78 மத்திய அமைச்சர்களில், 33 மத்திய அமைச்சர்கள் தங்கள் மீது குற்ற வழக்குகள் பதிவாகி உள்ளதாக அறிவித்துள்ளனர். 24 மத்திய அமைச்சர்கள் மீது, கொலை, கொள்ளை, கொலை முயற்சி உள்ளிட்ட தீவிர குற்ற வழக்குகள் பதிவாகி உள்ளதாக அறிவித்துள்ளனர். மத்திய அமைச்சர்கள் 4 பேர் மீது கொலை முயற்சி வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
வகுப்புவாத ஒற்றுமையை ஏற்படுத்தியதாக அமித் ஷா, கிரிராஜ் சிங் உள்ளிட்ட 5 மத்திய அமைச்சர்கள் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. மத்திய அமைச்சர்களிலேயே தமிழக பா.ஜ.க., முன்னாள் தலைவர் எல். முருகன் மீது 21 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
No comments:
Post a Comment