3வது அலையை தடுக்க இதுதான் வழி; புதிய சுகாதாரத்துறை அமைச்சரின் பலே ஐடியா!
சமீபத்தில் நடந்த மத்திய அமைச்சரவை விரிவாக்கத்தில் புதிய சுகாதாரத்துறை அமைச்சராக தேர்வு செய்யப்பட்ட மன்சுக் மாண்டவியா நேற்றைய தினம் பதவியேற்றுக் கொண்டார். இவர் நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பரவலை கட்டுக்குள் வைத்திருப்பது, சுகாதார உள்கட்டமைப்புகளில் இருக்கும் குறைபாடுகளை சரிசெய்வது, மூன்றாவது அலைக்கான முன்னேற்பாடுகளை செய்வது என பல்வேறு விஷயங்களை செய்ய வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார். மத்திய சுகாதாரத்துறை இணையமைச்சராக பாரதி பிரவின் பவார் பொறுப்பேற்றுள்ளார்.
தடுப்பூசி ஒன்றே தீர்வு
இந்நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மன்சுக் மாண்டவியா, கோவிட்-19 மூன்றாவது அலையை எதிர்கொள்ள போதிய முன்னேற்பாடுகளை அரசு முடுக்கி விட்டுள்ளது. தடுப்பூசி விநியோகத்தை விரைவுபடுத்தி தீவிர நோய்த்தொற்றுக்கு ஆளாகாமலும், இறப்பில் இருந்து தடுக்கும் வகையிலும் நடவடிக்கை எடுக்கப்படும்.
அனைத்து தரப்பினருக்கும் முக்கியத்துவம்
வரும் டிசம்பர் இறுதிக்குள் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் முழுவதுமாக தடுப்பூசி போட்டு முடிக்கப்படும். தடுப்பூசி விநியோகத்தை அதிகப்படுத்துவது மட்டுமின்றி முகாம்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்துதல், குக் கிராமங்கள் மற்றும் மலைவாழ் மக்களுக்கு சம விகிதத்தில் தடுப்பூசிகளை அளித்தல் ஆகிய நடவடிக்கைகளும் எடுக்கப்படும்.
No comments:
Post a Comment