புதிய மத்திய அமைச்சரவைப் பட்டியல்: 43 பேர்களுக்கு இடம்!
பிரதமர் மோடி இரண்டாவது முறையாக பதவியேற்ற பின்னர் அமைச்சரவையில் மாற்றமோ, விரிவாக்கமோ செய்யப்படாமல் இருந்தது. இந்த நிலையில், சில மாநிலங்களில் எதிர்வரும் சட்டமன்றத் தேர்தல், 2024ஆம் ஆண்டு மக்களவை தேர்தலை கருத்தில் கொண்டு அமைச்சரவையில் மாற்ற கொண்டுவர ஒன்றிய அரசு திட்டமிட்டது. அதன்படி, கடந்த சில நாட்களாகவே பாஜக தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா உள்ளிட்ட மூத்த தலைவர்கள், உள்துறை அமைச்சர் அமித் ஷா, ராஜ்நாத் சிங் உள்ளிட்டோருடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தினார்.
இதனிடையே, விரிவாக்கம் செய்யப்பட்ட அமைச்சரவை இன்று மாலை 6 மணிக்கு பதவியேற்பதாக தெரிவிக்கப்பட்டது. புதிய அமைச்சர்கள் பதவியேற்பையொட்டி, ரமேஷ் பொக்ரியால், சந்தோஷ் கங்வார், தாவர்சந்த் கெலாட், ஹர்ஷ் வர்தன் உள்ளிட மூத்த அமைச்சர்கள் பலர் தங்களது பதவியை ராஜினாமா செய்துள்ளனர். தாவர் சந்த் கெலாட் கர்நாடக மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்த நிலையில், புதிய அமைச்சரவைப் பட்டியலை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. அதில், தமிழக பாஜக தலைவர் எல்.முருகன், காங்கிரஸிலிருந்து விலகி பாஜகவில் சேர்ந்த ஜோதிர் ஆதித்யா சிந்தியா என மொத்தம் 43 பேர் இடம்பெற்றுள்ளனர்.
No comments:
Post a Comment