நாளை முதல் ஆக., 5 வரை மீண்டும் முழு ஊரடங்கு - பிரதமர் அறிவிப்பு! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Thursday, July 22, 2021

நாளை முதல் ஆக., 5 வரை மீண்டும் முழு ஊரடங்கு - பிரதமர் அறிவிப்பு!

நாளை முதல் ஆக., 5 வரை மீண்டும் முழு ஊரடங்கு - பிரதமர் அறிவிப்பு!


வங்கதேசத்தில் கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்து வருவதை அடுத்து, நாளை முதல் ஆகஸ்ட் மாதம் 5-ம் தேதி வரை என 14 நாட்களுக்கு
முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட உள்ளது.

அண்டை நாடான வங்கதேசத்தில், கொரோனா வைரஸ் தொற்று கடந்த சில நாட்களாக மீண்டும் அதிகரித்து வருகிறது. கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த அரசும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. கொரோனா பாசிட்டிவ் விகிதம் 32 சதவீதமாக அதிகரித்துள்ளது. பக்ரீத் பண்டிகைக்காக கடுமையான ஊரடங்கை வங்கதேச அரசு பிறப்பிக்காமல் இருந்து வந்தது.

இந்நிலையில், நாளை முதல் ஆகஸ்ட் மாதம் 5-ம் தேதி வரை அதாவது 14 நாட்களுக்கு முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட உள்ளதாக, வங்கதேச அரசு அறிவித்துள்ளது. இந்த ஊரடங்கு, நாளை காலை 8 மணி முதல் ஆகஸ்ட் மாதம் 5-ம் தேதி நள்ளிரவு வரை அமலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த முறையைக் காட்டிலும் இந்த முறை, ஊரடங்கு மிக கண்டிப்புடன் பின்பற்றப்படும் என்றும், ஊரடங்கு முறையாக கடைபிடிக்கப்படுகிறதா என்பதை ராணுவத்தினர் கண்காணிப்பர் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. அலுவலகங்கள், நீதிமன்றங்கள், தொழிற்சாலைகள் உள்ளிட்டவை செயல்பட தடை என்றும், அத்தியாவசியப் பணிகளுக்கு மட்டும் ஊரடங்கில் இருந்து விலக்கு அளிக்கப்படுவதாகவும் வங்கதேச அரசு அறிவித்துள்ளது.

No comments:

Post a Comment

Post Top Ad