ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கும் தமிழக தடகள வீரர்களுக்கு தலா ரூ.5 லட்சம்! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Tuesday, July 6, 2021

ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கும் தமிழக தடகள வீரர்களுக்கு தலா ரூ.5 லட்சம்!

ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கும் தமிழக தடகள வீரர்களுக்கு தலா ரூ.5 லட்சம்!

ஜப்பான் டோக்கியோவில் ஜூலை 23 முதல் ஆகஸ்ட் 5 வரை ஒலிம்பிக் போட்டி நடைபெறுகிறது. திட்டமிட்டபடி போட்டிகள் நடைபெறுவதற்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், பாதுகாப்பான முறையில் ஒலிம்பிக் தொடரை நடத்த ஜப்பான் திட்டமிட்டுள்ளது.

இப்போட்டியில் பங்கேற்பதற்காக 26 பேர் கொண்ட தடகள அணியை இந்திய தடகள சம்மேளனம் அறிவித்தது. அதில், தனிநபா் தடகள போட்டிகளில் பங்கேற்கும் 16 பேர், ஆடவருக்கான 4*400 மீ தொடர் ஓட்டத்தில் பங்கேற்கும் 5 பேர், கலப்பு 4*400 மீ தொடர் ஓட்டத்தில் 2 ஆடவா், 3 மகளிா் இடம் பெற்றுள்ளனர்.

தமிழகத்தை சேர்ந்த தனலட்சுமி சேகர், ரேவதி வீரமணி, சுபா வெங்கடேசன் ஆகிய மூன்று வீராங்கனைகளும் கலப்பு 4*400 மீ தொடர் ஓட்டத்துக்கான இந்திய அணியில் இடம் பெற்றுள்ளார்கள். இவர்களைத் தவிர ஆரோக்ய ராஜீவ், நாகநாதன் பாண்டி ஆகிய இரு தமிழக வீரர்களும் ஆண்களுக்கான 4*400 மீ தொடர் ஓட்டத்துக்கான இந்தியத் தடகள அணியில் இடம்பெற்றுள்ளார்கள்.

No comments:

Post a Comment

Post Top Ad