அதிகரிக்கும் கொரோனா: அவசரநிலை பிரகடனம் - இரவு 8 மணி முதல் ஊரடங்கு! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Friday, July 9, 2021

அதிகரிக்கும் கொரோனா: அவசரநிலை பிரகடனம் - இரவு 8 மணி முதல் ஊரடங்கு!

அதிகரிக்கும் கொரோனா: அவசரநிலை பிரகடனம் - இரவு 8 மணி முதல் ஊரடங்கு!


ஜப்பான் டோக்கியோவில் ஜூலை 23 முதல் ஆகஸ்ட் 8ஆம் தேதி வரை ஒலிம்பிக் போட்டி நடைபெறுகிறது. திட்டமிட்டபடி போட்டிகள் நடைபெறுவதற்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், பாதுகாப்பான முறையில் ஒலிம்பிக் தொடரை நடத்த ஜப்பான் திட்டமிட்டுள்ளது.

முன்னதாக, கொரோனா பரவல் காரணமாக வெளிநாட்டு ரசிகர்களுக்கு மட்டும் தடை விதிக்கப்பட்டது. ஒலிம்பிக் போட்டியை பார்க்க ஸ்டேடியத்திற்குள் உள்நாட்டு ரசிகர்கள் 50 சதவீதம் பேர், அதிகபட்சமாக 10 ஆயிரம் பேர் வரை கொரோனா தடுப்பு விதிகளை பின்பற்றி அனுமதிக்கப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதனிடையே, ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளை ஜப்பானில் நடத்துவதற்கு அந்த நாட்டில் கடுமையான எதிர்ப்பும் உள்ளது. ஒலிம்பிக் போட்டிகளை ரத்து செய்ய வேண்டும் அல்லது தள்ளி வைக்க வேண்டும் என்று கோரிக்கைகள் எழுந்துள்ளன. அதேசமயம், டோக்கியோவில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது.



இதனை கருத்தில் கொண்டு வருகிற 12ஆம் தேதி முதல் பிரதமர் யோஷிஹிடே சுகா அவசரநிலையை பிரகடனம் செய்துள்ளார். இது அடுத்த மாதம் 22ஆம் தேதி வரை நீடிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் ஒலிம்பிக் விளையாட்டு போட்டிகள் நடைபெறும் அனைத்து நாட்களும் தலைநகர் டோக்கியோவில் அவசரநிலை அமலில் இருக்கும் என ஜப்பான் அரசு அறிவித்துள்ளது. அவசர நிலை கட்டுப்பாடுகளுக்குட்பட்டே ஒலிம்பிக் போட்டி நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, இந்தத் தேதிகளில் உணவகங்களிலும் மதுபான விடுதிகளிலும் மதுபானங்களை விற்பனை செய்ய தடை விதிக்கப்படும். உள்ளூர் நேரப்படி இரவு 8 மணிக்கே அனைத்தும் மூடப்பட்டு

ஊரடங்கு விதிக்கப்படும்.

இதனிடையே, அவசரநிலை எதிரொலியாக ஒலிம்பிக் போட்டியை பார்க்க ரசிகர்களுக்கு முற்றிலும் அனுமதி இல்லை என்று ஜப்பான் ஒலிம்பிக் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

Post Top Ad