தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து - 52 பேர் பலி! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Friday, July 9, 2021

தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து - 52 பேர் பலி!

தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து - 52 பேர் பலி!


வங்கதேச நாட்டில், தொழிற்சாலை ஒன்றில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில், 52 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.


அண்டை நாடான வங்கதேச நாட்டின் தலைநகர் டாக்கா அருகே உள்ள ருப்கன்ஜ் என்ற இடத்தில், 6 மாடி கட்டடம் ஒன்றில் ஜூஸ் தொழிற்சாலை இயங்கி வந்தது. இந்நிலையில் , ஜூஸ் தொழிற்சாலையில் திடீரென்று பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதையடுத்து, அங்கு பணிபுரிந்த தொழிலாளர்கள் கீழே குதித்தனர். இதில் பலர் படுகாயம் அடைந்தனர். இந்த தீ விபத்தில் சிக்கி, 52 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

தீ விபத்து குறித்து தகவலறிந்த தீயணைப்புத் துறை அதிகாரிகள், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். தீ விபத்தில் 50-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர். அவர்கள் அனைவரும் அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.


மருத்துவமனையில் பலரது நிலை கவலைக்கிடமாக உள்ளதால், பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக் கூடும் என்று அஞ்சப்படுகிறது. தீ விபத்துக்கான காரணம் குறித்து வங்கதேச போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

No comments:

Post a Comment

Post Top Ad