அதிபர் படுகொலை வழக்கு: 28 பேர் கைது!
ஹைதி நாட்டின் அதிபர் ஜோவினல் மோய்ஸ் சுட்டுக் கொலை செய்யப்பட்ட வழக்கில் 28 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கரீபியன் தீவான ஹைதி நாட்டின் அதிபர் ஜோவினல் மோய்ஸ்,
கடந்த புதன்கிழமை அன்று அடையாளம் தெரியாத நபர்களால் தனது வீட்டில் சுட்டு படுகொலை செய்யப்பட்டார். துப்பாக்கிச் சூட்டில் உடனிருந்த அவர் மனைவி படுகாயம் அடைந்தார்.
இந்நிலையில், இந்தக் கொலை வழக்கில் தொடர்புடையதாகக் கூறி, 28 நபர்களை அந்நாட்டு காவல் துறையினர் கைது செய்துள்ளனர். அதில் 26 பேர் கொலம்பியா நாட்டைச் சேர்ந்தவர்கள் என்றும் மேலும் இரண்டு பேர் அமெரிக்காவில் வசித்த வந்த ஹைதி நாட்டைச் சேர்ந்தவர்கள் எனத் தெரிய வந்துள்ளது. இவர்களிடம் தொடர்ந்து தீவிர விசாரணை நடைபெற்று வருவதாகவும், மேலும் பலர் இந்த வழக்கில் கைது செய்யப்படுவர் என தெரிகிறது.
No comments:
Post a Comment