நீட் தேர்வு: ஏ.கே.ராஜன் குழுவுக்கு அவகாசம் நீட்டிப்பு
நீட் தேர்வின் தாக்கம் குறித்து ஆராயும் ஏ.கே.ராஜன் குழுவுக்கு, அறிக்கை தாக்கல் செய்வதற்கான கால அவகாசத்தை நீட்டிக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது.
தமிழகத்தில் நீட் தேர்வால் ஏற்பட்ட தாக்கம் குறித்து ஆராய்ந்து அறிக்கை தாக்கல் செய்ய ஓய்வு பெற்ற நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையில் குழு அமைத்து, கடந்த ஜூன் 10 தேதி அரசாணை வெளியிடப்பட்டது. ஏ.கே.ராஜன் குழுவுக்கு 30 நாட்கள் அவகாசம் வழங்கப்பட்டிருந்த நிலையில் நான்கு முறை குழு கூடி ஆய்வு செய்துள்ளது.
இதுவரை 85 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தங்கள் கருத்துக்களை குழுவிடம் வழங்கி உள்ள நிலையில், 90 சதவீத பணிகளை ஏ.கே.ராஜன் குழு நிறைவு செய்துள்ளது. இதனிடையே பா.ஜ.க., தொடர்ந்த வழக்கு விசாரணை நீதிமன்றத்தில் இருப்பதால் அறிக்கை தாக்கல் செய்வதில் கால தாமதம் ஏற்பட்டுள்ளது. ஏ.கே.ராஜன் குழுவுக்கு வழங்கப்பட்ட அவகாசம் இன்றுடன் நிறைவடையும் நிலையில், கூடுதல் அவகாசம் வழங்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது.
No comments:
Post a Comment