பெண் கைதிகளின் குழந்தைகளின் கல்வி நிலையை ஆய்வு செய்யுங்கள் - தமிழக அரசு
பல்வேறு குற்ற சம்பவங்களில் கைதாகி சிறைக்கு செல்லும் ஆண்கள், பெண்கள் தங்களது குழந்தைகளின் எதிர்காலத்தை கவனிக்க முடியாமல் உள்ளது.
இப்படி பலரது குழந்தைகள் உறவினர்களின் அரவணைப்பிலும், அரசு காப்பகங்களில் பாதுகாப்பிலும் விடப்பட்டாலும் அவர்களது
கல்வி நிலைமை எந்த நிலையில் உள்ளதென்று பார்ப்பது கட்டாயமான ஒன்று.
இந்நிலையில் அதற்கான முக்கிய அறிவிப்பு ஒன்றை தமிழக பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது. அந்த அறிவிப்பில், தமிழ்நாட்டில் உள்ள சிறைச்சாலைகளில் தண்டனை அனுபவிக்கும் பெண்களுடைய குழந்தைகளின் கல்வி நிலை என்ன?
சட்டப்படி அந்த குழந்தைகளின் கல்வி, உரிமைகள் அவர்களுக்கு கிடைக்கப்பெற்றனவா என்பதை ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
No comments:
Post a Comment