பிரதமருடன் தமிழக ஆளுநர் சந்திப்பு; பின்னணியில் இப்படியொரு பரபரப்பு! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Saturday, July 10, 2021

பிரதமருடன் தமிழக ஆளுநர் சந்திப்பு; பின்னணியில் இப்படியொரு பரபரப்பு!

பிரதமருடன் தமிழக ஆளுநர் சந்திப்பு; பின்னணியில் இப்படியொரு பரபரப்பு!


தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அமோக வெற்றி ஆட்சியை கைப்பற்றியது. இதையடுத்து ஒன்றிய அரசு விவகாரம், ஜெய்ஹிந்த் சர்ச்சை, நீட் தேர்வை ரத்து செய்ய குழு அமைத்தல், எழுவர் விடுதலையில் சட்டப் போராட்டத்திற்கு தயாராவது என மத்திய பாஜக அரசை கோபமடையச் செய்யும் பல்வேறு நடவடிக்கைகளில் திமுக அரசு ஈடுபட்டது.
பிரதமர் - தமிழக ஆளுநர் சந்திப்பு

இந்த சூழலில் மத்திய உள்துறை அமைச்சகத்தின் அழைப்பின் பேரில் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் நேற்று இரவு டெல்லி புறப்பட்டுச் சென்றார். இன்று காலை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆகியோரை சந்தித்து பேசினார். இதையடுத்து இன்று மாலை பிரதமர் மோடியை பன்வாரிலால் புரோஹித் சந்தித்தார்.

முக்கியத்துவம் வாய்ந்த பின்னணி

அப்போது தமிழகத்தின் அரசியல் நிலவரம், மாநில அரசு முன்வைத்துள்ள கோரிக்கைகள் உள்ளிட்டவை தொடர்பாக பிரதமரிடம் எடுத்துரைத்ததாக கூறப்படுகிறது. நீட் உள்ளிட்ட விஷயங்களில் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு விடாப்பிடியாக இருந்து வரும் சூழலில், அதற்கு எவ்வாறு வினையாற்றுவது என சில ஆலோசனைகளை பிரதமர் வழங்கியிருக்கலாம் என்றும் சொல்லப்படுகிறது.

No comments:

Post a Comment

Post Top Ad