திமுகவில் ஏன் இணைந்தேன்? எம்என்எம் பத்மப்ரியா ட்வீட்..! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Friday, July 9, 2021

திமுகவில் ஏன் இணைந்தேன்? எம்என்எம் பத்மப்ரியா ட்வீட்..!

திமுகவில் ஏன் இணைந்தேன்? எம்என்எம் பத்மப்ரியா ட்வீட்..!


தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் சுற்றுசூழல் மாநில செயலாளர் பத்மப்ரியா (25) மதுரவாயல் தொகுதியில் போட்டியிட்டார். இங்கு திமுக வேட்பாளர் காரப்பாக்கம் கணபதி அதிமுக வேட்பாளர் பென்ஜமினை 31721 வாக்கு வித்தியாசத்தில் வென்றார்.
முதல் முறையாக தேர்தலை சந்தித்த இளம் வேட்பாளர் பத்மப்ரியா தோற்கடிக்கப்பட்டார். இவர் மக்கள் நீதி மய்யம் கட்சியில் இணைவதற்கு கமலின் அரசியல் வியூகம், அவர் வகுக்கும் திட்டங்கள் உள்ளிட்ட காரணங்களை முன்வைத்தார்.

இந்நிலையில், தேர்தலில் தோற்ற பின்னர் அக்கட்சியில் இருந்து வெளியேறி திமுகவில் தற்போது தன்னை இணைந்துகொண்டார். இதுகுறித்து சமூக ஊடகங்களில் பலரும் பத்மப்ரியாவை விமர்சித்து வரும் நிலையில், ட்விட்டரில் விளக்கம் கூறியுள்ளார் . அவரது பதிவில் ''அரசியல் என்பது பெரும் கடல். இதுவரை ஏட்டுப்பாடத்தில் படித்ததையே நம்பிய நான், அனுபவப் பாடம் படிக்கத் தொடங்கி இருக்கிறேன்.
பெரியார் சொன்ன பகுத்தறிவின்படி, திராவிட அரசியலின் மாண்பையும், முக்கியத்துவத்தையும் இப்போதுதான் உணர்கிறேன். அதன்படி, மக்கள் பணி செய்ய திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர்
ஸ்டாலின் தலைமையில், மருத்துவர் மகேந்திரன் வழிகாட்டுதலின்படி கழகத்தில் இணைத்துக்கொண்டேன்'' என இவ்வாறு பதிவிட்டுள்ளார்.


No comments:

Post a Comment

Post Top Ad