ரெண்டு மாசத்தில் இவ்வளவு கோடி கொரோனா நிதி... அமைச்சர் பெருமிதம்! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Friday, July 9, 2021

ரெண்டு மாசத்தில் இவ்வளவு கோடி கொரோனா நிதி... அமைச்சர் பெருமிதம்!

ரெண்டு மாசத்தில் இவ்வளவு கோடி கொரோனா நிதி... அமைச்சர் பெருமிதம்!


தலைமைச் செயலகத்தில் முதல்வர் நிவாரண நிதிக்கான புதிய இணையதளத்தை நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜனும், தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் மனோ தங்கராஜ் ஆகியோர் அறிமுகம் செய்து வைத்தனர். அதன் பின்னர் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் செய்தியாளர்களிடம் கூறியது:

ஜனநாயகத்தில் அரசின் வெளிப்படைதன்மை மிக முக்கியம். அதைதான் ஆட்சி ஏற்றபோது தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் தங்களிடம் தெரிவித்ததார்.

அதனை கருத்தில் கொண்டுதான் மே 6 ஆம் தேதிக்கு முன்பு பெறப்பட்ட நிவாரண நிதி விபரங்கள் தனியாகவும், மே 7 ஆம் தேதிக்கு பிறகு பெறப்பட்ட நிதி தனியாகவும் பெறப்பட்டு வகைப்படுத்தப்பட்டுள்ளது. இதற்காக புதுப்பிக்கப்பட்ட இணையதளத்தை அமைத்துள்ளோம்.

இதற்கு முன்பு இருந்த முதல்வர் நிவாரண நிதிக்கான இணைய பக்கம் 20 ஆண்டுகள் புதுப்பிக்கப்படாமல் இருந்ததாகவும், சர்வர் சிக்கல் உள்ளிட்ட பல குறைபாடுகள் இருந்ததாகவும் கூறினார். எதற்காக நிதி வழங்கப்படுகிறது என்பதை பிரித்து வகைப்படுத்த முடியாமல் இருந்தது. அது தற்போது புதுப்பிக்கப்பட்டுள்ளது.

மே 7 ஆம் தேதியில் இருந்து இதுவரை கொரோனாவுக்காக 2 மாதங்களில் ரூ.472 கோடியே 62 லட்சத்து, 52 ஆயிரத்து 648 பெறப்பட்டுள்ளது. முதலமைச்சரின் மேல் மக்கள் நம்பிக்கை வைத்துள்ள காரணத்தால் 2 மாதங்களில் இவ்வளவு நிதி கிடைத்துள்ளது.

ஆனால், கடந்த ஆட்சியின்போது முதல் கொரோனா அலையிலிருந்து ஆட்சி மாற்றம் நடைபெற்ற வரை மொத்தம் ரூ.400 கோடி மட்டுமே நிவாரண நிதி பெறப்பட்டுள்ளதாக அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்தார்.

No comments:

Post a Comment

Post Top Ad