மத்திய அமைச்சரவை விரிவாக்கம்? அ.தி.மு.க.,வில் யாருக்கு மத்திய அமைச்சர் பதவி? பிரதமர் மோடி "பலே" ஐடியா
பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை நாளை மறுநாள் விரிவாக்கம் செய்யப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
மத்திய அமைச்சரவையை விரிவாக்கம் செய்வது குறித்து, அண்மையில், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, பா.ஜ.க., தேசியத் தலைவர் ஜே.பி. நட்டா உள்ளிட்டோரிடம், பிரதமர் நரேந்திர மோடி பல மணி நேரம் ஆலோசனை நடத்தினார். இதைத் தொடர்ந்து, மத்திய அமைச்சகங்களின் செயல்பாடுகள் குறித்து, சம்பந்தப்பட்ட அமைச்சர்களிடமும், பிரதமர் நரேந்திர மோடி தனித்தனியாக ஆலோசனை நடத்தினார்.
இந்நிலையில், இரண்டு நாட்களுக்கு முன்பு, மத்திய அமைச்சரவை விரிவாக்கம் தொடர்பாக, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, பா.ஜ.க., தேசிய பொதுச் செயலாளர் சந்தோஷ் ஆகியோர், பிரதமர் நரேந்திர மோடியுடன் நீண்ட நேரம் ஆலோசனை நடத்தினர். அப்போது, மத்திய அமைச்சர் பதவியிலிருந்து யாரை நீக்கலாம், புது முகங்கள் யார் யாருக்கு வாய்ப்பு அளிக்கலாம் என்பது குறித்து விவாதிக்கப்பட்டதாகத் தெரிகிறது.
மூத்த மத்திய அமைச்சர்கள் ரவிசங்கர் பிரசாத், பியுஷ் கோயல் உள்ளிட்டோர் மூன்று, நான்கு துறைகளைச் சேர்த்து கவனித்துக் கொள்கின்றனர். இதனால் அவர்களுக்கு பணிச்சுமை அதிகரிக்கிறது. அதே போல ஒருசில அமைச்சர்களின் செயல்பாடுகளும் கட்சித் தலைமைக்கும், பிரதமர் மோடிக்கும் பிடிக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதன் காரணமாக, நாளை மறுநாள் மத்திய அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
No comments:
Post a Comment