டாஸ்மாக் கடைகளில் நேர மாற்றம்; குடிமகன்களுக்கு ஷாக் அறிவிப்பு வெளியாகுமா? - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Saturday, July 10, 2021

டாஸ்மாக் கடைகளில் நேர மாற்றம்; குடிமகன்களுக்கு ஷாக் அறிவிப்பு வெளியாகுமா?

டாஸ்மாக் கடைகளில் நேர மாற்றம்; குடிமகன்களுக்கு ஷாக் அறிவிப்பு வெளியாகுமா?


தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு படிப்படியாக குறைந்து கொண்டிருக்கிறது. கடந்த மே 21ஆம் தேதி 36 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டது. அதன்பிறகு கோவிட்-19 பாதிப்பு தொடர்ந்து குறைந்து வருகிறது. நேற்று புதிதாக 2,913 பேருக்கு மட்டும் கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டது. 3,321 பேர் குணமாகி வீடு திரும்பியுள்ளனர். 49 பேர் பலியாகி இருக்கின்றனர். தற்போது 32,767 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். மாநிலத்தின் கொரோனா பாசிடிவ் விகிதம் 1.9 சதவீதமாக காணப்படுகிறது. இதன்மூலம் அடுத்த சில வாரங்களில் கொரோனா பாதிப்பு முழுவதுமாக கட்டுக்குள் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதையொட்டி நாளை (ஜூலை 12) காலை 6 மணி முதல் கூடுதல் தளர்வுகளை தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்த சூழலில் டாஸ்மாக் கடைகள் திறப்பு தொடர்பாக முக்கிய கோரிக்கை ஒன்று முன்வைக்கப்பட்டுள்ளது. தமிழக அரசு டாஸ்மாக் கடைகள் மூலம் மதுபான வகைகளை விற்பனை செய்து வருகிறது. முன்னதாக பிற்பகல் 12 மணி முதல் இரவு 10 மணி வரை செயல்பட்டு வந்தன. கொரோனா இரண்டாவது அலை காரணமாக கடந்த மே 10ஆம் தேதி முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது.
இதையொட்டி டாஸ்மாக் கடைகளும் மூடப்பட்டன. பின்னர் கொரோனா பரவல் குறைந்து வருவதைக் கருத்தில் கொண்டு ஜூன் 14ஆம் தேதி முதல் நோய்த்தொற்று குறைந்த பகுதிகளில் மட்டும் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை டாஸ்மாக் கடைகள் செயல்பட்டன. கடந்த 5ஆம் தேதி மாநிலம் முழுவதும் ஒரே மாதிரியான ஊரடங்கு தளர்வுகள் அமலுக்கு வந்தன. அன்று முதல் காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரை டாஸ்மாக் கடைகள் செயல்பட்டு வருகின்றன.
தற்போது ஊரடங்கு முடிவுக்கு வந்து பொதுமக்கள் வேலைக்கு செல்லத் தொடங்கியுள்ளனர். இந்த சூழலில் கட்டுமானம், ஓட்டுநர் உள்ளிட்ட வேலைகளில் ஈடுபடுவோர் காலை 10 மணிக்கே டாஸ்மாக் கடைகளுக்கு சென்று குடித்து விட்டு வேலைக்கு வருவதாக சொல்லப்படுகிறது. இதில் சில கல்லூரி மாணவர்களும் இருப்பதாக கூறப்படுகிறது.
இவர்கள் பல்வேறு கடைகளின் முன்பு விழுந்து விடுகின்றனர். சிலர் தேவையற்ற வாக்குவாதங்களில் ஈடுபடுகின்றனர். இதனால் சட்டம் - ஒழுங்கு பிரச்சினை ஏற்படும் என்று அஞ்சப்படுகிறது. எனவே முன்பிருந்ததை போல் காலை 10 மணிக்கு பதிலாக பிற்பகல் 12 மணிக்கு டாஸ்மாக் கடைகளை திறக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.


No comments:

Post a Comment

Post Top Ad