மத்திய அரசுக்கு எதிராகச் சேலத்தில் கொதித்தெழுந்த சிஐடியு! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Tuesday, July 6, 2021

மத்திய அரசுக்கு எதிராகச் சேலத்தில் கொதித்தெழுந்த சிஐடியு!

மத்திய அரசுக்கு எதிராகச் சேலத்தில் கொதித்தெழுந்த சிஐடியு!


மத்திய அரசு பெட்ரோல் டீசல் விலை உயர்வை நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. இந்த சூழலில் ஒரு லிட்டர் பெட்ரோலின் விலை நூறு ரூபாய் அளவிற்கு உயர்ந்துள்ளது. அதேபோல் சமையல் கியாஸ் விலை ஆயிரம் ரூபாய் அளவிற்கு உயர்ந்துள்ளது.

மத்திய அரசின் இந்த போக்கைக் கண்டித்து தமிழகத்தின் பல்வேறு அரசியல் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாகச் சேலம் புதிய பேருந்து நிலையம் அருகே பெட்ரோல் டீசல் விலை உயர்வைத் திரும்பப் பெற வேண்டும், சாலை போக்குவரத்து சட்டத்தைத் திரும்பப் பெற வேண்டும் வாகன இன்சூரன்ஸ் எப்சி சாலை வரி ஆகியவற்றை ஆறு மாத காலத்திற்கு ஒத்தி வைக்க வேண்டும் என ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி சிஐடியு போக்குவரத்து தொழிலாளர்கள் மற்றும் ஆட்டோ தொழிற்சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் மத்திய அரசைக் கண்டித்துக் கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டது.
சிஐடியு சாலைப் போக்குவரத்து சங்க மாநில துணைத் தலைவர் தியாகராஜன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் 50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இதேபோல் மேட்டூர் எடப்பாடி நங்கவள்ளி காடையாம்பட்டி ஏற்காடு ஜங்ஷன் பழைய பேருந்து நிலையம் உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட இடங்களில் சிஐடியு சார்பில் பெட்ரோல் டீசல் விலை உயர்வைக் கண்டித்துக் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

No comments:

Post a Comment

Post Top Ad