ரேஷன் கடையில் காத்திருக்கும் மகிழ்ச்சி: குடும்பத் தலைவிகளுக்கு குஷியான தகவல் - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Friday, July 9, 2021

ரேஷன் கடையில் காத்திருக்கும் மகிழ்ச்சி: குடும்பத் தலைவிகளுக்கு குஷியான தகவல்

ரேஷன் கடையில் காத்திருக்கும் மகிழ்ச்சி: குடும்பத் தலைவிகளுக்கு குஷியான தகவல்


தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணி 159 இடங்களில் வெற்றி பெற்றன. திமுக தனித்து 125 இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்தது. தமிழக முதல்வராக பதவியேற்ற மு.க.ஸ்டாலின் முதற்கட்டமாக கொரோனா நிவாரணமாக குடும்பத்துக்கு ரூ. 4000, ஆவின் பால்விலை லிட்டருக்கு ரூ. 3 குறைப்பு, தனியார் மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சைக்கான கட்டணத்தை தமிழக அரசே காப்பீட்டு திட்டத்தின் கீழ் ஏற்கும், அனைத்து மகளிருக்கும் சாதாரண கட்டண நகரப்பேருந்துகளில் கட்டணமின்றி பயணிக்கலாம் உள்ளிட்ட தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்களுக்கு கையெழுத்திட்டார்.

அதன்படி, கொரோனா நிவாரண நிதி முதல் தவணையாக 2000 ரூபாய் கடந்த மே மாதமே வழங்கப்பட்டது. இரண்டாம் தவணையாக 2000 ரூபாயுடன் 14 மளிகை பொருட்கள் அடங்கிய தொகுப்பு ஜூன் மாதம் கொடுத்து முடிக்கப்பட்டது. இந்நிலையில் திமுக தேர்தல் அறிக்கையில் குடும்பத் தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1000 உரிமைத்தொகை வழங்கப்படும் திட்டம் எப்போது அமலுக்கு வரும் என்ற எதிர்பார்ப்பு மக்களிடையே எழுந்துள்ளது.

இதனிடையே இன்று செய்தியாளர்களை சந்தித்த உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி, '' இல்லத்தரசிகளுக்கு மாதந்தோறும் ரூ.1000 வழங்கும் திட்டத்தை நிதிநிலையை கருத்தில்கொண்டு உரிய நேரத்தில் முதலமைச்சர்

ஸ்டாலின் அறிவிப்பார்'' என்று தெரிவித்தார்.ஆனால், இந்த திட்டத்தை செயல்படுத்திவிட்டால் தடையின்றி திட்டத்தை ஒவ்வொரு மாதமும் அரசு வழங்கிவிட வேண்டும். பேரிடர் காலங்களில் இந்த திட்டம் அரசுக்கு பெரும் நெருக்கடியை உண்டாக்கும் என்பதால், சூழ்நிலைக்கேற்பவாறு சில மாதம் கூட்டியோ அல்லது குறைக்கவோ இந்த திட்டத்தை செயல்படுத்தலாம். அதேசமயம் திட்டமும் தடை பட கூடாது, நிதி நெருக்கடியையும் அரசு சமாளிக்க வேண்டும் என்ற சூழலில் அத்தியாவசிய பொருட்களின் விலை உயரலாம் என்றும் அரசியல் பேசுபவர்கள் கூறுகின்றனர்.


No comments:

Post a Comment

Post Top Ad