தலைமை செயலகமா? அறிவாலயமா? உதயநிதியால் வந்த சர்ச்சை!
சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள அமைச்சர் அலுவலகத்தில், தி.மு.க., இளைஞரணி செயலாளரும், எம்.எல்.ஏ.,வுமான உதயநிதியின் புகைப்படம் இடம் பெற்றிருப்பது குறித்து, எதிர்க்கட்சியான அ.தி.மு.க., கேள்வி எழுப்பி உள்ளது.
நடந்து முடிந்த தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில், தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான கூட்டணி அமோக வெற்றி பெற்று, 10 ஆண்டுகளுக்கு பிறகு, ஆட்சி அமைத்துள்ளது. தமிழக முதலமைச்சராக மு.க. ஸ்டாலின் பதவி ஏற்றார்.
இத்தேர்தலில், சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிட்ட, தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலினின் மகனும், நடிகரும், தி.மு.க., இளைஞரணிச் செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் வெற்றி பெற்றார். போட்டியிட்ட முதல் தேர்தலிலேயே வெற்றி பெற்று, சட்டப்பேரவைக்குள் உதயநிதி ஸ்டாலின் நுழைந்துள்ளார்.சட்டப்பேரவைத் தேர்தல் பிரசாரத்தின் போதே, உதயநிதி ஸ்டாலினுக்கு தி.மு.க.,வில் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது. தி.மு.க., வேட்பாளர்களை ஆதரித்து, உதயநிதி பிரசாரம் செய்யும் அளவுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டது. தி.மு.க.,வில் பல ஆண்டுகளாக முக்கியப் பொறுப்புகளில் இருக்கும் மூத்தத் தலைவர்களை ஆதரித்து, உதயநிதி ஸ்டாலின் பிரசாரம் செய்ததும் அரங்கேறியது.
தி.மு.க., ஆட்சிக்கு வந்தவுடன், கட்சி சார்பில் நடைபெறும் விழாக்களில், தி.மு.க., தலைவர் ஸ்டாலின் படம் மிகவும் பெரியதாக இடம்பெற்றிருக்கும். அதே அளவில் உதயநிதி ஸ்டாலினின் படம் இடம் பெறுகிறது. ஸ்டாலினுக்கு அடுத்து உதயநிதியை முன்னிலைப்படுத்தவே இது போன்ற நடவடிக்கைகள் அரங்கேறுவதாக கட்சி மூத்தத் தலைவர்கள் தெரிவிக்கின்றனர்.
No comments:
Post a Comment