சர்வதேச விமானப் போக்குவரத்துக்கு தடை நீட்டிப்பு! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Friday, July 30, 2021

சர்வதேச விமானப் போக்குவரத்துக்கு தடை நீட்டிப்பு!

சர்வதேச விமானப் போக்குவரத்துக்கு தடை நீட்டிப்பு!

கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக கடந்த ஆண்டு மார்ச் மாதம் 23ஆம் தேதி முதல் சர்வதேச போக்குவரத்தை ஒன்றிய அரசு நிறுத்தியது. இதையடுத்து மேற்கொள்ளப்பட்ட தளர்வுகளின் அடிப்படையில், வெளிநாட்டில் சிக்கித் தவிக்கும் நபர்களை மீட்கும் நடவடிக்கையாக, வெளிநாடு வாழ் இந்தியர்களை அழைத்துவரும் வந்தே பாரத் மிஷன் நடவடிக்கையை இந்தியா செயல்படுத்தியது.

இதையடுத்து, கொரோனா இரண்டாவது அலை அதிகரிக்கத் தொடங்கியதால், சர்வதேச விமானப் போக்குவரத்துக்கான தடையை ஒன்றிய அரச்சு நீட்டித்துக் கொண்டே வந்தது. அதேசமயம், சில குறிப்பிட்ட நாடுகளுக்கு மட்டும் விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில், சர்வதேச விமானப் போக்குவரத்துக்கான தடையை வருகிற ஆகஸ்ட் மாதம் 31ஆம் வரை ஒன்றிய அரசு நீட்டித்துள்ளது. உலக அளவில் கொரோனா தொற்று பரவல் இன்னும் கட்டுக்குள் வராததால், சர்வதேச பயணிகள் விமான சேவைகள் மீது விதிக்கப்பட்டுள்ள தடை நீட்டிக்கப்படுவதாக

விமானப் போக்குவரத்து இயக்குநரகம் அறிவித்துள்ளது.

இருப்பினும், சரக்கு விமானப் போக்குவரத்துக்கு எந்தத் தடையுமில்லை. ‘ஏா் பபுள்’ விதிகளின் அடிப்படையில் விமானங்கள் தொடா்ந்து இயக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த விதிகளின் அடிப்படையில், அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ், ஐக்கிய அரபு அமீரகம் உள்ளிட்ட 17 நாடுகளுக்கிடையே விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Post Top Ad