கோவையில் இன்று ஒருத்தர் மட்டுமே பலி: தமிழக கொரோனா நிலவரம் - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Tuesday, July 13, 2021

கோவையில் இன்று ஒருத்தர் மட்டுமே பலி: தமிழக கொரோனா நிலவரம்

கோவையில் இன்று ஒருத்தர் மட்டுமே பலி: தமிழக கொரோனா நிலவரம்


தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 2,505 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்றுடன் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 25,23,943 ஆக அதிகரித்துள்ளது.
மாநிலத்தில் தற்போது 31,218 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
சென்னையில் மட்டும் இன்று 160 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், மொத்த பாதிப்பு 535439 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் இதுவரை 525523 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். 8267 பேர் உயிரிழந்துள்ளனர்.

கோவையில் இன்று 290 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 225617 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை 219730 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். 2108
பேர் பலியாகியுள்ளனர்.
செங்கல்பட்டில் இன்று 144 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 159430 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை 155762 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். 2374 பேர் பலியாகியுள்ளனர்.

தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 1,39,113 பேருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதுவரை 3,39,68,810
பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

மாநிலத்தில் இன்று 3,058 நோயாளிகள் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளதால் இதுவரை குணமானோர்களின் எண்ணிக்கை 24,59,223 ஆக அதிகரித்துள்ளது. இன்று மேலும் 48 பேர் உயிரிழந்துள்ள நிலையில், மொத்த பலி எண்ணிக்கை 33,502 ஆக உயர்ந்துள்ளது

No comments:

Post a Comment

Post Top Ad