தூத்துக்குடியில் குடிசையை ஒழித்துக் கொடுத்த வீட்டால் மக்கள் உயிருக்கே ஆபத்து! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Sunday, July 11, 2021

தூத்துக்குடியில் குடிசையை ஒழித்துக் கொடுத்த வீட்டால் மக்கள் உயிருக்கே ஆபத்து!

 தூத்துக்குடியில் குடிசையை ஒழித்துக் கொடுத்த வீட்டால் மக்கள் உயிருக்கே ஆபத்து!


தூத்துக்குடி மாவட்டத்தில் சாலையோரத்தில் வசித்த மக்களுக்குக் குடிசை மாற்று வாரியம் சார்பில் கட்டிக் கொடுக்கப்பட்ட குடியிருப்புகள் இடிந்து விடும் அபாய நிலையில் உள்ளது. இதனால் தினம் தினம் அச்சத்தில் வாழ்ந்து கொண்டிருப்பதாக குடியிருப்பு வாசிகள் தெரிவித்துள்ளனர்.
Vதூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட சாலையோர பகுதிகளில் வசித்து வந்த மக்கள், காட்டுநாயக்கர் சமுதாயத்தைச் சேர்ந்தவர்களுக்குத் தூத்துக்குடி ராமதாஸ் நகரில் சுமார் 23 ஆண்டுகளுக்கு முன்பு குடிசை மாற்று வாரியம் சார்பில் 104 வீடுகள் கட்டிக் கொடுக்கப்பட்டன.

இந்த வீடுகளை சுமார் 10 ஆண்டுகளுக்கு மேலாகப் பராமரிக்க அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் இங்கு உள்ள அனைத்து வீடுகளையும் மேற்கூரை பகுதிகள், சுவர்கள் இடிந்து விழும் அபாயத்தில் உடன் மழை பெய்தால் வீடுகளில் வசிக்க முடியாத சூழல் நிலவுகிறது.
இதனால் மழைநீர் உள்ளே புகுந்து விடுவதாகவும் குடியிருப்பு வாசிகள் தெரிவிக்கின்றனர். இதனால் எப்போது வீடு இடிந்து விழுமோ என அச்சத்தில் வாழ்ந்து வருவதாகக் கவலை தெரிவிக்கின்றனர்.


No comments:

Post a Comment

Post Top Ad