சுடுகாட்டில் உயிர் பிழைத்த சிசு தேனி மருத்துவமனையில் மீண்டும் பலி! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Monday, July 5, 2021

சுடுகாட்டில் உயிர் பிழைத்த சிசு தேனி மருத்துவமனையில் மீண்டும் பலி!

சுடுகாட்டில் உயிர் பிழைத்த சிசு தேனி மருத்துவமனையில் மீண்டும் பலி!

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள தாமரைக்குளம் பகுதியைச் சேர்ந்தவர் பிளவேந்திரராஜா. இவரது மனைவி ஃபாத்திமா மேரி 6 மாத கர்ப்பம் அடைந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு வயிற்று வலி ஏற்பட்டு தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

காலையில் அவருக்குப் பிறந்த பெண் குழந்தை நீண்ட நேரமாகியும் உடலில் அசைவுகள் இல்லாததால் இறந்ததாகக் கூறி மருத்துவர்கள் குழந்தையை ஒப்படைத்தனர். கல்லறைக்கு எடுத்துச் செல்லப்பட்டு அடக்கம் செய்யவிருந்த நிலையில், குழந்தையின் உடலில் அசைவுகளிருந்ததால் மீண்டும் தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்க்கப்பட்டது

அங்கு பச்சிளம் குழந்தைகள் தீவிர சிகிச்சைப் பிரிவில் மருத்துவர்கள் கண்காணிப்பிலிருந்த குழந்தை இன்று காலை உயிரிழந்தது. இதையடுத்து ஆண்டிபட்டி வட்டாட்சியர், தேனி அரசு மருத்துவக்கல்லூரி முதல்வர் ஆகியோர் முன்னிலையில் குழந்தையின் உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

தற்போது பெரியகுளம் தாமரைக்குளம் பகுதியில் உள்ள கல்லறைத் தோட்டத்தில் மத வழக்கப்படி குழந்தையின் உடல் அடக்கம் செய்யப்பட்டது.

No comments:

Post a Comment

Post Top Ad