முதல்வர் பக்கத்தில் இருப்பவர்களுக்கு இப்படி ஒரு பிரச்சினையா?
திமுக ஆட்சிக்கு வந்ததிலிருந்து பல்வேறு ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாக பரவலாக ஒரு பேச்சு நிலவுகிறது. கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் முழு வீச்சில் நடைபெற்றன, நிவாரணப் பணிகளும் முடுக்கிவிடப்பட்டன, பெண்கள், மாற்றுத்திறனாளிகள், திருநங்கைகளுக்கு அரசுப் பேருந்தில் இலவச பயணம், பால் விலை குறைப்பு ஆகியவை உடனடியாக செயல்படுத்தப்பட்டன.
பட்ஜெட் கூட்டத் தொடரின் போது மேலும் சில முக்கிய அறிவிப்புகள் வெளியாக உள்ளன. துறை ரீதியாகவும் ஆய்வுக் கூட்டங்கள், ஆலோசனைக் கூட்டங்கள் தொடர்ச்சியாக நடத்தப்படுகின்றன. முதலமைச்சர் ஸ்டாலினும் அனைத்துப் பணிகளையும் தனது செயலாளர்கள் மூலம் உன்னிப்பாக கவனித்து வருகிறார். ‘உங்கள் தொகுதியில் முதலமைச்சர்’ திட்டத்தின் மூலம் பல்வேறு மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டன.
போக்குவரத்து தொழிலாளர்கள் மட்டுமல்லாமல் அனைத்து அரசு ஊழியர்களுக்கும் பழைய ஓய்வூதிய திட்டத்தை கொண்டுவர அரசு முயற்சிகள் மேற்கொண்டுள்ளது. இதனால் அரசு ஊழியர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் மகிழ்ச்சியில் உள்ளனர்.
No comments:
Post a Comment