ஐ.பி.எஸ்., அதிகாரி மீது தேச துரோக வழக்கு பதிவு! காரணம் என்ன? - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Saturday, July 10, 2021

ஐ.பி.எஸ்., அதிகாரி மீது தேச துரோக வழக்கு பதிவு! காரணம் என்ன?

ஐ.பி.எஸ்., அதிகாரி மீது தேச துரோக வழக்கு பதிவு! காரணம் என்ன?


அரசுக்கு எதிராகச் சதி செய்ததாகக் கூறி, சத்தீஸ்கர் மாநில ஐ.பி.எஸ். அதிகாரி மீது தேசத் துரோக வழக்குப் பதியப்பட்டுள்ளது.

சத்தீஸ்கர் போலீஸ் பயிற்சிக் கல்லூரித் தலைவராக இருந்த ஜி.பி.சிங், வருமானத்துக்கு அதிகமாகச் சொத்துச் சேர்த்ததாகக் குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து அவருக்குச் சொந்தமான 15 இடங்களில் ஊழல் தடுப்புப் பிரிவு, பொருளாதாரக் குற்றப் பிரிவு ஆகியவற்றின் அதிகாரிகள் அண்மையில் சோதனை நடத்தினர்.


இதை அடுத்து, பணியிலிருந்து ஜி.பி.சிங் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். அப்போது கைப்பற்றப்பட்ட ஆவணங்களில் அரசுக்கு எதிராகவும், மக்கள் பிரதிநிதிகளுக்கு எதிராகவும் வெறுப்பைத் தூண்டும் வாசகங்கள் இடம் பெற்றிருந்ததாகக் கூறப்படுகிறது.

இதன் அடிப்படையில், அவர் மீது ஐபிசி 124-ஏ(தேச துரோக வழக்கு) மற்றும் 153 -ஏ (மதம், மொழி அடிப்படையில் இரு பிரிவினர் இடையே மோதலை ஏற்படுத்துதல் ) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து அவரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.

No comments:

Post a Comment

Post Top Ad