யானை வேண்டும்; கிடைக்கும் வரை போராடுவோம்: அண்ணாமலை தகவல்! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Saturday, July 24, 2021

யானை வேண்டும்; கிடைக்கும் வரை போராடுவோம்: அண்ணாமலை தகவல்!

யானை வேண்டும்; கிடைக்கும் வரை போராடுவோம்: அண்ணாமலை தகவல்!

பாஜக மாநிலத் தலைவராக புதிதாக பொறுப்பேற்றுள்ள அண்ணாமலை, திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோயிலில் சுவாமி தரிசனம் மேற்கொண்டார். அதன்பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், திருவண்ணாமலை கோயிலுக்கு பௌர்ணமி நாட்களில் 10 லட்சம் முதல் 15 லட்சம் வரை மக்கள் வருவார்கள். கார்த்திகை தீபத்தின் போது 35 லட்சம் வரை மக்கள் வருகிறார்கள். இந்த ஆலயத்தில் யானை இல்லாதது தொடர்பாக பாஜக குரல் கொடுக்கும். இதற்கு முழுமையான தீர்வு கிடைக்கும் வரை போராடுவோம் என்றார்.

பாஜக கட்சியை பற்றி உங்களுக்கு தெரியும் என்று தெரிவித்த அண்ணாமலை, பாஜகவின் சித்தாந்தமே தமிழ் மண்ணை சார்ந்த சித்தாந்தம்தான். ஆன்மீகத்தை அடிப்படையாக வைத்து தான் இந்த கட்சி வளர்ந்து கொண்டிருக்கிறது. தமிழக மக்களுக்கு அடிப்படையிலேயே ஆன்மீகத் தேடுதல் இருக்கிறது. ஆன்மிகத்தில் அவர்களுடைய வாழ்க்கை பயணத்தை கொண்டு போக வேண்டும் என்பதற்காக கோயிலை புண்ணிய ஸ்தலமாக பார்க்கிறார்கள் என்றும் தெரிவித்தார்.


ஆர்எஸ்எஸ்எஸ் தலைவர் வருகை தொடர்பாக சுற்றறிக்கை விட்ட, மதுரை உதவி ஆணையரை வேகமாக பணிக்கு கொண்டுவர வேண்டும். அவர் எந்த தவறும் செய்யவில்லை. மீண்டும் அவரை பணியில் அமர்த்த வேண்டும் என்றும் அண்ணாமலை அப்போது வலியுறுத்தினார்.

அடுத்த 15 நாட்களுக்கு எப்படி தடுப்பூசி வரும் என்ற விவரத்தை மத்திய அரசு முறையாக அறிவித்துவிடுகிறார்கள். அதேபோலத்தான் வருகிறது என்று சுட்டிக்காட்டிய அண்ணாமலை, திமுகவினர் தடுப்பூசி போடப்படும் மருத்துவமனைகளுக்கு சென்று டோக்கன்களை வாங்கி அவர்களுக்கு தெரிந்த நபர்களுக்கு கொடுத்து வருகிறார்கள் என்றும் குற்றம்சாட்டினார்.

தமிழகத்துக்கு மத்திய அரசு கூடுதலாகத்தான் தடுப்பூசியை வழங்குகிறது. குறைவாக கொடுக்கிறது என்று அரசு அறிக்கை விடுவார்களா என்று கேள்வி எழுப்பியதுடன், மத்திய அரசு நிறைய தடுப்பூசி கொடுக்கிறது என்று டெல்லி செல்லும்போது சொல்லி விட்டு, சென்னை வந்ததும் பேச்சை மாற்றி விடுகிறார்கள் என்றும் குற்றம் சாட்டினார்.



மத்திய அரசை பொறுத்தவரை பெட்ரோல், டீசல் விலையை கட்டுக்குள் கொண்டு வருவதற்கான வேலையை செய்து கொண்டு இருக்கிறார்கள். நிச்சயமாக கட்டுக்குள் கொண்டு வரப்படும் என்றும் அண்ணாமலை அப்போது உறுதியளித்தார்.

No comments:

Post a Comment

Post Top Ad