திமுகவின் அராஜக போக்கு நீடிக்காது; அதிமுக முன்னாள் அமைச்சர் காட்டம்! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Saturday, July 24, 2021

திமுகவின் அராஜக போக்கு நீடிக்காது; அதிமுக முன்னாள் அமைச்சர் காட்டம்!

திமுகவின் அராஜக போக்கு நீடிக்காது; அதிமுக முன்னாள் அமைச்சர் காட்டம்!


முன்னாள் போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கரூரில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையாக லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடைபெற்றுள்ளது. எனது வங்கி கணக்குகள் எதுவும் இதுவரையில் முடக்கப்படவில்லை. லஞ்ச ஒழிப்பு போலீசாரின் சோதனை தொடர்பாக அதிமுக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

என் இல்லம், தொழிற்சாலைகளில் எடுக்கப்பட்ட பணத்துக்கு கணக்கு உள்ளது. லஞ்ச ஒழிப்பு போலீசார் சம்மன் அனுப்பிய பிறகு உரிய கணக்கை சமர்ப்பிப்போம். இந்த சோதனை எதிர்பார்த்ததுதான்.

இதை சட்ட ரீதியாக எதிர்கொள்வோம். எனக்கு கரூரிலும், சென்னையிலும் சொந்த வீடு கிடையாது. 35 ஆண்டுகாலம் தொழில் செய்து வருகிறேன். பொய்யான செய்திகளை பத்திரிகைகள் பரப்பி வருகின்றன.



பொய் வழக்குகளை போட்டு கரூர் மாவட்டத்தில் அதிமுகவை முடக்க நினைக்கிறார்கள். கரூரில் அதிமுகவை சேர்ந்த தேர்ந்தெடுக்கப்பட்ட உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கு பல தொல்லைகளை கொடுத்து திமுகவுக்கு கட்சி மாற வைக்கின்றனர்.

சிறுமியை சிதைத்த சித்தப்பா; தட்டிக்கேட்டவர் மீது தாக்குதல்!

கொரோனா ஊசி வழங்கும் டோக்கன்களை திமுகவினர் எடுத்து செல்கின்றனர். திமுகவின் அராஜக போக்கு நீடிக்காது. போக்குவரத்து துறையில் பணிபுரியும் அதிமுகவினரை பல ஊர்களுக்கு பணியிட மாறுதல் செய்கின்றனர். இது நல்லதல்ல. இவ்வாறு எம்.ஆர்.விஜயபாஸ்கர் தெரிவித்தார்.

No comments:

Post a Comment

Post Top Ad