மொத்தமா போச்சே, கோட்டை விட்ட திமுக அரசு; அதிமுக குற்றச்சாட்டு!
கேரள மாநிலத்தின் தொழில் கொள்கைகளால் கடுப்பான கிடெக்ஸ் குழுமம், தங்களது மூவாயிரத்து ஐநூறு கோடி ரூபாய் முதலீட்டை வேறு மாநிலத்திற்கு இடமாற்றம் செய்ய திட்டமிட்டது. இதுதொடர்பாக முறையான அறிவிப்பை கிடெக்ஸ் குழும்பத்தின் தலைவர் தாபு எம்.ஜேக்கப் வெளியிட்டிருந்தார். இந்த சூழலில் கிடெக்ஸ் நிறுவனத்திற்கு உரிய சலுகைகள் மற்றும் மானியங்கள் வழங்க தயாராக இருப்பதாக தமிழக அரசு அன்று கடிதம் அனுப்பியது. இதுபற்றி தாபு ஜேக்கப் ஊடகங்களிடமும் தெரிவித்தார். இந்த சூழலில் புதிதாக பதவியேற்றுள்ள திமுக அரசு, அதனை தொடர்ந்து பின்பற்றாமல் விட்டு விட்டதாக கூறப்படுகிறது.
கிடெக்ஸ் நிறுவன முதலீடு
இதன் விளைவாக கிடெக்ஸ் நிறுவனத்தின் முதலீடு தெலங்கானா மாநிலத்திற்கு சென்றுள்ளது. முன்னதாக தெலங்கானா மாநிலத்தின் தொழில்துறை அமைச்சர் கே.டி.ராமாராவ் அவர்கள், கிடெக்ஸ் குழுமத்தின் நிர்வாகத்தோடு பலசுற்று பேச்சுவார்த்தை நடத்தி தமிழகத்திற்கு வர வேண்டிய வாய்ப்பை தங்கள் மாநிலத்திற்கு தட்டிச் சென்றிருக்கிறார். 1,700 ஏக்கர் பரப்பளவு உள்ள ஜவுளி பூங்கா நிர்வாகம்,
பிரம்மாண்ட ஆயத்த ஆடை யூனிட்
மாநில தொழில்துறை உட்கட்டமைப்பு துணைத்தலைவருமான இ.வி.நரசிம்ம ரெட்டி ஆகியோருடன் கிடெக்ஸ் குழுமம் நடத்திய பேச்சுவார்த்தை, அங்கே பிரம்மாண்ட ஆயத்த ஆடை யூனிட் ஒன்றை நிறுவுவதற்கு அடித்தளமிட்டுள்ளது. இதற்காக 3,500 கோடி ரூபாய் முதலீடு செய்யப்படவுள்ளது. இதன்மூலம் தெலங்கானா மாநிலத்தில் 4,000 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்.
No comments:
Post a Comment