ஒருநாள் விட்டு ஒருநாள் வகுப்புகள்: ஸ்டாலின் எடுக்கும் முடிவு என்ன? - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Friday, July 16, 2021

ஒருநாள் விட்டு ஒருநாள் வகுப்புகள்: ஸ்டாலின் எடுக்கும் முடிவு என்ன?

ஒருநாள் விட்டு ஒருநாள் வகுப்புகள்: ஸ்டாலின் எடுக்கும் முடிவு என்ன?


கொரோனா பாதிப்பு குறைந்து வரும் நிலையில் தமிழ்நாட்டில் பள்ளிகளைத் திறக்க வேண்டும் என தனியார் பள்ளிகள் சங்க கூட்டமைப்பு கோரிக்கை வைத்துள்ளது.
சென்னை தலைமைச் செயலகத்தில் முதவர் மு.க.ஸ்டாலினை தனியார் பள்ளிகள் சங்க கூட்டமைப்பினர் சந்தித்தனர். அப்போது கொரோனா தடுப்பு நடவடிக்கைக்காக ஒரு கோடியே இரண்டு லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கினர்.

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அக்கூட்டமைப்பின் தலைவர் பி.டி.அரசகுமார், “கொரோனா பாதிப்பு குறைந்து வருவதால் பள்ளிகளை படிப்படியாக திறக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளோம்.

அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் மாணவர்கள் மாற்றுச் சான்றிதழ் இல்லாமல் சேர்க்கப்படுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், கல்விக் கட்டண நிர்ணயக் குழுவை அமைக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளோம்.

எல்கேஜி முதல் ஐந்தாம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு காலையிலும், 6 முதல் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மதியத்துக்குப் பின்னரும் வகுப்புகள் நடைபெற அனுமதிக்க வேண்டும் என முதல்வரிடம் கோரிக்கை வைத்தோம். அல்லது ஒருநாள் ஆரம்பப் பள்ளி மாணவர்களுக்கும் மறுநாள் மற்ற வகுப்பு மாணவர்களுக்கும் நேரடி வகுப்புகள் நடைபெற ஆவண செய்ய கேட்டுக்கொண்டோம்” என அரசகுமார் தெரிவித்தார்.

No comments:

Post a Comment

Post Top Ad