தடுப்பூசி போடாத வெளிநாட்டவருக்கு அனுமதி இல்லை - பிரதமர் அறிவிப்பு - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Friday, July 9, 2021

தடுப்பூசி போடாத வெளிநாட்டவருக்கு அனுமதி இல்லை - பிரதமர் அறிவிப்பு

தடுப்பூசி போடாத வெளிநாட்டவருக்கு அனுமதி இல்லை - பிரதமர் அறிவிப்பு


கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ளாத வெளிநாட்டு பயணிகளுக்கு தங்கள் நாட்டிற்குள் அனுமதி வழங்கப் போவதில்லை என, கனடா நாட்டின் பிரதமர் ஜஸ்டீன் ட்ரூடோ தெரிவித்துள்ளார்.
கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிராக, பல்வேறு உலக நாடுகளும் வெளிநாட்டுப் பயணிகளுக்கு கடும் கட்டுப்பாடுகளை விதித்து வருகின்றன. தடுப்பூசி செலுத்திக் கொண்ட வெளிநாட்டுப் பயணிகளுக்கு மட்டும் பல்வேறு நாடுகளில் அனுமதி அளிக்கப்பட்டு வருகிறது.
கனடாவில் தற்போது 2 தவணை தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களுக்கு தனிமைப்படுத்துதலில் இருந்து விலக்களிக்கப்பட்டு உள்ளது. நாட்டில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த, கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ளாத வெளிநாட்டு பயணிகளை நாட்டிற்குள் அனுமதிக்கப் போவதில்லை. எதிர்வரும் காலங்களில் இந்தக் கட்டுப்பாடுகள் மேலும் கடுமையாக்கப்படும்.



No comments:

Post a Comment

Post Top Ad