எடப்பாடி கூடாரத்தை காலி பண்ணும் செந்தில் பாலாஜி: அசைன்மென்ட்டை கச்சிதமாக முடிப்பதால் ஸ்டாலின் மகிழ்ச்சி!
அதிமுக ஆட்சி காலத்தில் அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி, அக்கட்சிக்குள் ஏற்பட்ட சலசலப்புகளையடுத்து, அமமுகவில் சேர்ந்தார். பின்னர் அங்கிருந்து திமுகவில் ஐக்கியமாகியுள்ளார். அவருக்கு மின்சாரத் துறை அமைச்சர் என்ற முக்கிய பதவியை கொடுத்து அழகு பார்த்துள்ளார் ஸ்டாலின். ஆனால், அப்படி பசையான பதவியை அவருக்கு கொடுத்ததற்கு பின்னால் சில காரணங்களும் உள்ளதாக அரசியல் நோக்கர்கள் கூறியிருந்தனர். சமயம் தமிழிலும் இதுபற்றி ஏற்கனவே செய்தி வெளியிட்டிருந்தோம்.
இதனிடையே, கொரோனா தடுப்பு பணிகளில் தீவிரம் காட்டிய முதல்வர் ஸ்டாலின், ஒவ்வொரு மாவட்டத்துக்கும் சில அமைச்சர்களை கொரோனா தடுப்புப் பொறுப்பாளர்களாக நியமித்தார். குறிப்பாக, முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் சேலம் மாவட்டத்துக்கு மின்சாரத் துறை அமைச்சர் செந்தில்பாலாஜி பொறுப்பாளராக நியமிக்கப்பட்டார்.
முன்னதாக, திமுகவுக்கு செந்தில் பாலாஜி வந்ததுமே கடந்த ஆட்சியில் தகுதி நீக்கம் செய்யப்பட்ட தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் 2019 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலோடு சேர்த்து நடந்தது. அதன்பிறகு சில நாட்களிலேயே கொத்தாக சில எம்.எல்.ஏ.க்களை திமுகவுக்கு கொண்டு வர செந்தில் பாலாஜி அனுமதி கேட்டதாகவும், அந்த சமயத்தில் அதனை ஸ்டாலின் அதனை மறுத்து அமைதி காக்குமாறும் கூறியதாக செய்திகள் வெளியாகின.
இந்த நிலையில், ஆட்சிப் பொறுப்பேற்றதும் சேலம் மாவட்ட பொறுப்பாளருடன் சேர்த்து வேறு சில அசைன்மென்ட்டுகளும் செந்தில் பாலாஜிக்கு கொடுக்கப்பட்டதாக தெரிகிறது. அந்த வகையில், முதல் ஆபரேஷனாக கடந்த சட்டமன்றத் தேர்தலில் எடப்பாடி சட்டமன்றத் தொகுதிக்கு அதிமுக பொறுப்பாளராக செயல்பட்டு, எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமியை பெருவாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற வைத்தவரான செல்லத்துரை உள்பட 50க்கும் மேற்பட்ட சேலம் புறநகர் மாவட்ட நிர்வாகிகளை திமுகவுக்கு இழுத்து வந்துள்ளார் செந்தில் பாலாஜி.
No comments:
Post a Comment