இரவு 10 மணி வரை கடைகள், மால்கள் செயல்படலாம்: மாநில அரசு அறிவிப்பு!
டெல்லியில், கொரோனா பாதிப்பு குறைந்து வருவதை அடுத்து, கடைகள், வணிக வளாகங்கள், சந்தைகள் உள்ளிட்டவை வழக்கமான நேரம் வரை, அதாவது இரவு 10 மணி வரை செயல்படலாம் என,
அம்மாநில முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார்.
தலைநகர் டெல்லியில், கொரோனா வைரஸ் தொற்றின் இரண்டாவது அலையின் தாக்கம் கடந்த சில நாட்களாக குறைந்து வருகிறது. தினசரி கொரோனா பாதிப்பு 50க்கு கீழே பதிவாகி வருகிறது. இதை அடுத்து, தளர்வுகளுடன் அமலில் உள்ள ஊரடங்கில், மேலும் பல
தளர்வுகளை, டெல்லி அரசு அறிவித்துள்ளது.
இது குறித்து, ஆம் ஆத்மி கட்சித் தலைவரும், டெல்லி முதலமைச்சருமான அரவிந்த் கெஜ்ரிவால் செய்தியாளர்களிடம் பேசியதாவது:
கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக, சந்தைகள் இரவு 8 மணி வரை மட்டுமே செயல்பட அனுமதி வழங்கப்பட்டது. அண்மைக்காலமாக கொரோனா பாதிப்பு எண்ணிக்கை குறைந்து வருகிறது. இதன் காரணமாக, கடைகள், வணிக வளாகங்கள், சந்தைகள் உள்ளிட்டவை வழக்கமான நேரம் வரை,
அதாவது இரவு 10 மணி வரை செயல்பட அனுமதி வழங்கப்படுகிறது. கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்றாத கடைகள், நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
No comments:
Post a Comment